கிறிஸ்தவ கொள்கைக்கும் திராவிட கொள்கைக்கும் வித்தியாசம் கிடையாது.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மதுரை: கிறிஸ்தவ கொள்கைக்கும், திராவிட கொள்கைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.. சமத்துவத்தை அடுத்தவரிடம் போதிக்க வேண்டும் என்று தான் இரண்டும் வலியுறுத்துகிறது என மதுரையில் நடைபெற்ற கிறிஸ்தவ விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். பாசிஸ்ட்டுகளின் எல்லா நடவடிக்கைகளையும் தாண்டி தமிழகத்தையும் தமிழ்நாட்டையும் காப்போம். திமுகவிற்கும் சிறுபான்மை மக்களுக்கான பந்தத்தை பிரிக்க முடியாது என்றும் உதயநிதி கூறினார்.
பெந்தெகோஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பில், கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மதுரை பைபாஸ் அருகே உள்ள நேரு நகரில் நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அமைச்சர்கள் மூர்த்தி, அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்மஸ் வாழ்த்துகள். என் மேல் காட்டும் தனி பிரியம். கிறிஸ்தவ கொள்கைக்கும் திராவிட கொள்கைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. சமத்துவத்தை அடுத்தவரிடம் போதிக்க வேண்டும் என்று தான் இரண்டும் வலியுறுத்துகிறது.
இவ்வளவு மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும். முழுவதும் ஒரு போரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது என்றால் அது இயேசு கிறிஸ்து பிறப்பு
எப்போது அரண்மனை எல்லாம் இருப்பாங்க அப்படிங்கிற அந்த கருத்தை தன்னுடைய பிறப்பால் உணர வச்சவர்தான் இயேசு அவர்கள். பல்வேறு நலத்திட்டங்களை நன்மைகளை சிறுபான்மை மக்களுக்கு செய்துள்ளது திமுக அரசு.
சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக உறுதுணையாக இருக்கும். அவர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சகோதரத்துவம் சமத்துவம் மதசார்பின்மையே நம் அடையாளம். வெறுப்பு பொய் பிளவுவாத பிரச்சனைகளை பிரச்சாரங்களை புறந்தள்ளி நாம் ஒரே அணியில் இணைய வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான அணிக்கு கூட்டங்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்.
கிறிஸ்துமஸ் திருவிழாவை மட்டும் கொண்டாடாமல் இயேசுவின் கருத்துக்களையும் நாம் கொண்டாட வேண்டும். சாதாரணமானவர்கள் உழைத்தால் உயரலாம் என்பதை நிருபித்த தியாகம் திராவிட இயக்கம். உயர்ந்த கொள்கையான இரக்கத்தை போதிப்பது கிறிஸ்தவம். அதையே தான் திராவிடமும் கூறுகிறது. ஆனால் தமிழகம் தமிழ்நாடு மீது ஒன்றிய அரசுக்கு இரக்கம் இல்லை. கிறிஸ்துமஸ் என்றாலே நட்சத்திரம் தோரணம் வண்ண விளக்குகள் நிறைந்தது.
கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் என் மீது தனி பாசம் தனி அன்பு வைத்துள்ளனர். கிறிஸ்தவ கொள்ளைகளுக்கும் திராவிட கொள்கைகளுக்கும் வேறுபாடு இல்லை. மனிதநேயம் அன்பை மட்டுமே இரண்டு கொள்கைகளும் போதிக்கிறது. இந்திய ஒன்றியத்தை ஆளும் அரசுக்கு தமிழகம் தமிழ்நாடு மீது பயம் உள்ளது. எங்கே மக்கள் ஒன்றாகிவிடுவார்கள் நம்மை எதிர்த்துவிடுவார்கள் என்ற பயம். ஒன்றிய அரசின் பாசிஸ்டுகளின் தமிழகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபாடது.
சாதியால் மதத்தால் பிரித்தாள நினைக்கிறார்கள். அது நடக்காது. தமிழகம் தனித்துவமான மாநிலம். மக்களை பிரித்து பிரித்தாளும் சூழ்ச்சியால் கலவரத்தை ஏற்படுத்த முயன்றால் மக்களே தக்க பாடம் புகட்டுவார்கள். அதற்கு ஒருநாளும் மக்கள் இணங்க மாட்டார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் ஆட்சி நடத்துகிறார் முதல்வர். பிரித்துக்கொடுப்பது என்றாலே ஒன்றிய அரசுக்கு பிடிக்கவில்லை.
ஒன்றிய அரசு நிதியை பிரித்து கொடுக்காவிட்டாலும் எல்லா தேவைகளையும் நிறைவேற்றி வருகிறார் முதல்வர். பாசிஸ்ட்டுகளின் எல்லா நடவடிக்கைகளையும் தாண்டி தமிழகத்தையும் தமிழ்நாட்டையும் காப்போம். திமுகவிற்கும் சிறுபான்மை மக்களுக்கான பந்தத்தை பிரிக்க முடியாது. அனைவருக்கும் நன்றி" இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications