விடாது பெய்யும் கனமழை- கரைபுரண்டோடும் வைகை... பொதுமக்களுக்கு மதுரை ஆட்சியர் எச்சரிக்கை
மதுரை: வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு இறக்கவோ வேண்டாம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
வைகை அணையில் இருந்து விவசாய பணிகளுக்கு ஏற்கனவே 1 மாத காலமாக 1,100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. தற்போது வருஷநாடு, மூல வைகை பகுதியில் கனமழை கொட்டி வருகிறது.
கொட்டக்குடி, சுருளியாறு, பாம்பனாறு என வைகையின் துணை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்தும் வைகை அணைக்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

வைகை நதியில் வெள்ளம்
மதுரை, தேனி மாவட்டங்களும் மழை பெய்ததால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,553 கன அடியாக உள்ளது. வைகை அணையில் நீர்மட்டம் 66.83 அடியாகவும் உள்ளது. ஒரே ஆண்டில் வைகை அணை 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டுவதால் அப்பகுதிகளின் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரையில் இரு கரைகளை ஆரத்தழுவும் வைகை
இன்று காலை வைகை அணையில் இருந்து 569 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மதுரை மாநகரில் இரு கரைகளையும் ஆரத் தழுவியபடி வைகை நதி ஆர்ப்பரித்து பாய்ந்தோடுகிறது. மதுரை யானைக்கல் தரைப்பாலத்தில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. யானைக்கல் தரைப்பால பகுதிகளில் போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மதுரை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வைகை ஆற்றில் இறங்கி குளிக்கவோ, அதன் கரையோரப் பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக இறக்கவோ கூடாது எனவும் மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

2 பேர் உயிரிழப்பு
இதனிடையே மதுரை மாவட்டம் பரவை அருகே நேற்று வைகை ஆற்றில் குளித்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயமாகினர். திருப்பூரை சேர்ந்த இரு இளைஞர்கள், பரவையில் திருவிழாவுக்காக வந்திருந்தனர். அப்போது வைகை நதியில் குளிக்க சென்ற நிலையில் மாயமகினர். இந்த இளைஞர்களை தேடும் பணி இன்று 2-வது நாளாக நீடித்தது. பல மணிநேர தேடுதலுக்குப் பின்னர் 2 இளைஞர்களின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications