என்னை சுட்டுப் பிடிக்க உத்தரவா? பதறிப் போய் மதுரையில் பிரஸ் மீட் கொடுத்த வரிச்சியூர் செல்வம்!
மதுரை: கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டதால் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்க போலீசார் உத்தரவு எனத் தகவல் பரவிய நிலையில், மதுரையில் அவர் பேட்டி அளித்துள்ளார். தான் கோவைக்கு சென்றே 13 வருடம் ஆகிவிட்டது எனத் தெரிவித்துள்ளார் வரிச்சியூர் செல்வம்.
மதுரை மாவட்டம் வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் கோவை செல்வபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

கோவையில் கட்டப்பஞ்சாயத்து ஒன்றுக்காக தனது ஆதரவாளர்கள் மற்றும் ஆயுதங்களுடன் வரிச்சியூர் செல்வம் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை பிடிக்க கோவையில் 5 சிறப்பு தனி படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
தனிப்படையினர் நேற்று இரவு முதல் செல்வபுரம் உள்பட மாநகரம் முழுவதும் சல்லடை போட்டு வரிச்சியூர் செல்வம் கேங்கை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது. ஓட்டல்கள், லாட்ஜ்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என பல இடங்களில் அவரை தேடினர். ஆனால் வரிச்சியூர் செல்வமோ, அவரது ஆதரவாளர்களோ பிடிபடவில்லை. இன்றும் தேடுதல் வேட்டை 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மதுரையில் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார் வரிச்சியூர் செல்வம். அப்போது பேசிய அவர், "கோவை பகுதிக்கு சென்று கட்டப்பஞ்சாயத்து செய்ததாக இப்போது நான் செய்தி பார்த்தேன். நான் கோவை பக்கம் போயே 13 வருடம் ஆகிவிட்டது. போலீஸ் கட்டுப்பாட்டில் தான் நான் இருக்கிறேன். நான் எங்கு போனாலும் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் சொல்லிவிடுவேன். நான் வெளியே எங்கு சென்றாலும் என் இருப்பிடத்தை அனுப்பி விடுவேன்.
போலீஸ்காரர்கள் தான் என்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறைக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையா வாழ்ந்துட்டு இருக்கேன். எந்த கேஸுக்கும் நான் போறதில்லை. பேரன், பேத்திகளோடு நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் தலைமையில் இன்று ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இந்த தவறான செய்தி காரணமாக அதற்கு போக முடியாமல் போய்விட்டது." எனக் கூறியுள்ளார்.
-
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications