டாஸ்மாக்கை திறந்து வச்சதாலதான்.. அந்த குழந்தையை கொளுத்திட்டாங்க.. திறக்காதீங்க.. நந்தினி ஆவேசம்
மதுக்கடைகளை திறக்க கூடாது என்று நந்தினி உண்ணாவிரத போராட்டம் செய்தார்
மதுரை: "சாராய கடையை திறக்காதீங்க.. மூடுனா மூடினதுதான்.. திறந்தீங்கன்னா மக்களே அடிச்சி நொறுக்குவாங்க.. அதனாலதான் அந்த குழந்தையை உயிரோடு கொளுத்திட்டாங்க" என்று வழக்கறிஞர் நந்தினியும், அவரது தந்தையும் முழக்கமிட்டு போராட்டம் செய்தனர்.
விழுப்புரம் ஜெயஸ்ரீ படுகொலை மக்கள் மனசை தொடர்ந்து பாதித்து வருகிறது.. முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருப்பினும், ஒரு குழந்தையை உயிரோடு எரித்தது யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை.

ஜெயஸ்ரீயை எரித்து கொலை செய்ததாக அதிமுக நிர்வாகிகள் முருகன், கலியபெருமாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. விசாரணையும் நடந்து வருகிறது.. இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களுமே கோரிக்கை விடுத்தனர்.
இதில் விஜயகாந்த் ஒரு படிமேலபோய், அவர்கள் 2 பேருக்கும் தூக்கு தண்டனையே தர வேண்டும் என்று ஆவேசமானார்.. இதே கோரிக்கையை வலியுறுத்திதான் சமூக ஆர்வலர் நந்தினியும், அவரது தந்தையும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் சம்பவத்தை பொறுத்தவரை கொலையாளிகள் 2 பேருமே குடிபோதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் இந்த படுகொலை சம்பவம் நடந்தது தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்ட 2வது நாளில் என்பதால், மதுக்கடைகளுக்கு எதிராகவும் கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்துள்ளன.
ஆத்திகுளம் காந்திபுரம் பகுதியில் நந்தினியின் வீடு உள்ளது.. இன்று காலை உண்ணாவிரத போராட்டம் நடத்தபோவதாக ஏற்கனவே அவர் அறிவித்தும் இருந்தார்... அதனால் அவரது வீட்டு முன்பு இன்று அதிகாலையிலிருந்தே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டம் நடத்துவதற்காக மதுரை ஹைகோர்ட் கிளைக்கு நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் கிளம்பி வந்தனர்.. அப்போது இருவரையும், போலீசார் வீட்டின் முன்பே கைது செய்தனர்.
அப்போது, அவர்கள், ""சாராய கடையை திறக்காதீங்க.. மூடுனா மூடினதுதான்.. திறந்தீங்கன்னா மக்களே அடிச்சி நொறுக்குவாங்க.. அதனாலதான் அந்த குழந்தையை உயிரோடு கொளுத்திட்டாங்க... அந்த 2 பேர் மேலயும் என்ன நடவடிக்கை எடுத்தீங்க.. தூக்கு தண்டனை தந்துடுங்க.. சாராய கடையை மட்டும் திறந்திடாதீங்க.. சுப்ரீம் கோர்ட்டில் போட்ட வழக்கை வாபஸ் வாங்குங்க" என்று ஆவேச கோஷமிட்டனர்.. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications