Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

551 கோவில்களில் குடமுழுக்கு – அமைச்சர் சேகர்பாபுவின் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: வரும் 7 மாதங்களில் தமிழகத்தில் உள்ள 551 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Recommended Video

    551 கோவில்களில் குடமுழுக்கு – அமைச்சர் சேகர்பாபுவின் அறிவிப்பு

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் ரோப் கார் அமைவிடத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை மாநில இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பிகே சேகர்பாபு இன்று துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் வரும் 7 மாதங்களில் 551 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 6 மாதத்தில் ரூபாய் 1600 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டு உள்ளது எனக் கூறினார்.

    திருக்கோவில்களுக்கு வரைவு திட்டம்

    திருக்கோவில்களுக்கு வரைவு திட்டம்

    தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற 47 திருக்கோயில்களுக்கு வரைவு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், அதனடிப்படையில் அந்த கோவில்களுக்கு பேருந்து வசதிகள்,கழிவறை வசதிள், மலைப்பாதையில் உள்ள கோவில்களுக்கு மருத்துவமனைகள், மடப்பள்ளி, ரோப் கார் வசதி,தானியங்கி வசதி, உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனக் கூறினார்.

    அறநிலையத்துறையில் மறுமலர்ச்சி

    அறநிலையத்துறையில் மறுமலர்ச்சி

    வரும் 5 ஆண்டுகளில் இந்து அறநிலையத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய அமைச்சர், தமிழகத்தில் மொழி இன ஜாதி மதங்களை கடந்து இந்து அறநிலைத்துறை செயல்பட்டு வருகிறது எனவும், தமிழகத்தில் பழனி கோவிலுக்கு அடுத்தபடியாக திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது எனவே ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

    சோளிங்கரில் ரோப்கார்

    சோளிங்கரில் ரோப்கார்

    சோளிங்கரில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு 53 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பேசிய அமைச்சர் சேகர் பாபு,சோளிங்கர் நரசிம்மர் சாமி கோவிலுக்கு வரும் ஆறு மாத காலத்திற்குள் ரோப்கார் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முதலில் பாதுகாப்பு கருதி மூன்று மாத காலத்திற்குள்ளாக வெள்ளோட்டம் விடப்பட்டு, பின்னர் ரோப்கார் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    காலிப்பணியிடங்கள் நிரப்பட்டு வருகிறது

    காலிப்பணியிடங்கள் நிரப்பட்டு வருகிறது

    இந்து அறநிலை துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது குறிப்பாக அவசியம் தேவைப்படுகின்ற இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது எனவும், சென்னை கபாலீஸ்வரர் கலைக்கல்லூரியில் இந்த ஆண்டு 240 மாணவர்கள் சேர்ந்துள்ளனதாகவும், இக்கல்லூரியில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+