என்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியா? போர்க்கொடி தூக்கும் 17 சிவசேனா எம்.எம்.எல்.ஏக்கள்?
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனாவின் 17 எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. 105 இடங்களில் பாஜகவும் 56 இடங்களில் சிவசேனாவும் வெற்றி பெற்றன.

இரு கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைத்தால் சமமான அதிகாரப் பகிர்வு தேவை என்கிற நிபந்தனையை சிவசேனா முன்வைத்தது. இதனை பாஜக நிராகரித்ததுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் விடுத்த அழைப்பையும் மறுத்துவிட்டது.
இதனையடுத்து புதிய அரசு எதுவும் அமைக்கப்படாததால் மகாரஷ்டிராவில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது . அதேநேரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை சிவசேனா மேற்கொண்டது.
இதன் முதல் கட்டமாக மூன்று கட்சிகளும் இணைந்து குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கின. மேலும் சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வர் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தற்போது காங்கிரஸ், என்சிபியுடன் இணைந்து ஆட்சி அமைக்க 17 சிவசேனா எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர் என்கின்றன தகவல்கள். இது தொடர்பாக உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் 17 பேரும் நேரம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்களை சந்திக்க உத்தவ் தாக்கரே நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த 17 பேரும் கர்நாடகா பாணியில் ராஜினாமா செய்வார்களா? அல்லது கூண்டோடு பாஜகவில் ஐக்கியமாவார்களா? என்கிற கேள்விகளுடன் மகாராஷ்டிரா அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகி உள்ளது.
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications