எருமை கன்ற கூட விடவில்லை.. அட காமவெறியனே.. ஒன்று கூட ஊர்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் எருமை கன்று ஒன்று பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர் மக்கள் அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளதால் அவர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரம்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள டெக்கான் பகுதியில் நேற்று (அக்.28) இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது இந்த பகுதியில் ஒரு எருமை கன்று ஒன்று மேய்ந்துகொண்டிருந்திருக்கிறது. அப்போது அந்த பகுதில் இருந்த இளைஞர் ஒருவர் கன்றை மறைவான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் அங்கு வைத்து கன்றை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அந்த வழியாக வந்த சிலர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தாக்குதல்
அந்த இளைஞரிடம் விசாரித்ததில் சம்பந்தப்பட்ட இளைஞர் நேபாளத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. மேலும் விசாரிக்கையில் இளைஞர் அங்கிருந்து நழுவ முற்பட்டுள்ளார். ஆனால் அதற்குள் இளைஞரை சூழ்ந்துகொண்ட மக்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். இது பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. அங்கிருந்தவர்கள் சேர்ந்து இளைஞரை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். இதனால் நிலைகுலைந்த நேபாள இளைஞர் சரிந்து விழுந்துள்ளார்.

சிகிச்சை
இது குறித்து தகவலயறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு காயங்களுடன் இருந்த இளைஞரை மீட்டு சசூன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "இளைஞர் ஒருவரை உள்ளூர் மக்கள் சரமாரியாக தாக்குவதாக புகார் வந்தது. இதனையடுத்து நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். அங்கு மயங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் விழுந்து கிடப்பது தெரிய வந்தது.

கைது
விசாரித்ததில் இவர்தான் எருமை கன்றை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி சிலர் வீடியோ ஆதாரங்களை காண்பித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதித்து, அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 377 கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்று டெக்கான் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். எருமை கன்றை பாலியல் பலாத்காரம் செய்ததால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications