ஆடிஷனுக்கு சென்றேன்! கூல்டிரிங்ஸில் போதை மருந்து கொடுத்த இயக்குநர்! பாலிவுட் நடிகை பரபரப்பு புகார்
மும்பை: போதை மருந்து கொடுத்து இயக்குநர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் முயன்றதாகவும் தான் அதிலிருந்து தப்பியதாகவும் நடிகை ரத்தன் ராஜ்புத் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
மீ டூ என்ற டேக்கின் கீழ் நடிகைகள், தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியுலகிற்கு தெரிவித்து வருகிறார்கள். இதை தமிழ்நாட்டில் பாடகி சின்மயி தொடங்கினார். அதில் நிறைய பேர் பாலியல் தொல்லைகளை புகாராக பதிவு செய்திருந்தனர்.

புகார் கூறிய பெண்ணின் அடையாளத்தை மறைத்து சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் சின்மயி வெளியிட்டு பெரிய மனுஷன் என்ற போர்வையில் இருப்போரின் முகத்திரையை கிழித்து வந்தார். அந்த வகையில் மீ டூவில் இந்தி நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நடிகை ரத்தன் ராஜ்புத்- இவர் இந்தி படங்களிலும் தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். ஒரு சேனலுக்கு நேர்காணல் அளித்த போது அந்த மோசமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில் நான் ஒரு படத்தில் நடிக்க நடிகைக்கான தேர்வு நடப்பதை அறிந்தேன்.
இதையடுத்து நடிகை தேர்வு நடப்பதாக சொல்லப்பட்ட ஓஷிவாரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றேன். என் ஆண் நண்பரும் உடன் வந்தார். எனக்கு ஒரு சிசுவேஷன் கூறப்பட்டது. அதற்கேற்ப நடிக்குமாறு அங்கிருந்த இயக்குநர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் கூறினார். நானும் நடித்தேன், அவரும் நான் நன்றாக நடித்தேன் என பாராட்டினார்.
பின்னர் எனக்கு குளிர்பானம் கொடுத்தார். நான் ஒரு சிப் குடித்த போதே நான் அசவுகரியமாக இருப்பதை உணர்ந்து கொண்டேன். உடனே குளிர்பானத்தில் போதை பொருளை கலந்திருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். பின்னர் என்னை இன்னொரு அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு எல்லா இடங்களிலும் துணிகள் வீசப்பட்டு கிடந்தன.
அங்கு ஒரு பெண் குடிபோதையில் மயங்கி கிடப்பதை பார்த்தேன். அங்கிருந்த ஒருவன் எதற்காக பாய் பிரண்ட்டை எல்லாம் இங்கு அழைத்து வருகிறீர்கள் என சப்தம் போட்டார். உடனே அந்த இடத்தில் ஏதோ தப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அங்கிருந்து என் நண்பரை அழைத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டேன் என தனக்கு நடக்கவிருந்த மோசமான அனுபவத்தில் இருந்து தான் எப்படி தப்பினேன் என்பதை அவர் விளக்கியுள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications