“டெல்லி வரை ஆள் இருக்கு.. தடம் தெரியாம ஆக்கிருவேன்”.. மிரட்டும் பாஜக மாவட்ட தலைவர்.. பகீர் புகார்!
மும்பை: மும்பை ஏர்போர்ட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளாக் கொக்கைனை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில், அது என்ன என்பது குறித்த இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர்.
போதைப்பொருள் பயன்பாடு சமீப ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போதைப்பொருள் சப்ளைவை மிக எளிமையானதாக மாற்றுகிறது.
இதன் காரணமாக இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாடு என்பது சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாஜக மாவட்ட தலைவர்
திருநெல்வேலி மாவட்ட பாஜக அமைப்பு சாரா துணைத்தலைவராக இருந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தற்போதைய பாஜக நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் மீது பணமோசடி புகார் சுமத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனது பெயர் ஆர்.சுபாஷ் சந்திர போஸ். திருநெல்வேலி மாவட்ட பாஜகவின் முன்னாள் அமைப்பு சாரா மாவட்ட துணை தலைவராக இருந்தேன். நான் திருநெல்வேலி மாவட்டம் பாலாமடையை சேர்ந்தவன்.

தயாசங்கர்
தற்போது திருநெல்வேலி மாவட்ட பாஜகவின் தலைவராக உள்ள தயாசங்கர் என்னிடம் கூட்டாக குவாரி தொழில் செய்வோம் எனக் கூறி முதலீடுக்கு 40 லட்சம் பணம் கேட்டார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, எனது சகோதரியின் கணவர் சண்முக சுந்தரத்திடம் பேசி அவரிடம் பணத்தை பெறுவோம், அவரை தொழிலில் கூட்டாக சேர்க்கிறேன் எனக் கூறி எனது அத்தான் சண்முக சுந்தரத்திடம் ரூபாய் 40 லட்சம் பெற்று தயாசங்கரிடம் கொடுத்தேன்.

தடம் தெரியாம ஆக்கிருவேன்
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம். அதனால் எங்களுக்கு தரவேண்டிய பணம் 40 லட்ச ரூபாயை பல முறை கேட்டோம் அதன் பேரில் 15 லட்ச ரூபாய் மட்டும் தந்தார். மீதி பணம் 25 லட்ச ரூபாயை இப்போது தருகிறேன் அப்போது தருகிறேன் எனக் கூறி ஏமாற்றி வருகிறார். இதனிடையில் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டால் "உன்னால ஆனதைப் பாரு.. பணமும் கிடையாது ஒண்ணும் கிடையாது.. எங்க வேணும்னா போய் சொல்லு.. எனக்கு டெல்லி வரை ஆள் இருக்கு.. ஆள் தெரியாம பேசாத.. தடம் தெரியாம ஆக்கிருவேன்" என மிரட்டுகிறார்.

தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்
நேர்மையான அரசியல் கட்சியான பாஜகவுக்கும் அதன் தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் திருநெல்வேலி மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் தயாசங்கர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இச்செய்தியை மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கவனத்திற்கு செல்லும் படி உதவவேண்டும். கூட்டாக சேர்ந்து குவாரி நடத்தி பணம் தராமல் மோசடி செய்வதும் இல்லாமல் பணத்தை கேட்டால் மிரட்டும் திருநெல்வேலி பாஜக மாவட்ட தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவில் பரபரப்பு
பாஜக முன்னாள் நிர்வாகியின் இந்த புகார் நெல்லை மாவட்ட பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அண்ணாமலை கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வெளிப்படையாக ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டிருப்பதால், தயாசங்கர் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்? "அவருக்கு வேறு திட்டம் இருக்கு.." பியூஷ் கோயல் கொடுத்த விளக்கம்! -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications