வயிற்றில் நெருப்பை கட்டியுள்ள தாக்கரே அண்ட் கோ.. அஜித்பவார்- பாஜக எம்பி சந்திப்பின் பின்னணி என்ன?
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்று இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ள நிலையில் அஜித் பவாரை பாஜக எம்பி சந்தித்துள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த மாதம் 24-ஆம் தேதி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி கடந்த சில நாட்களுக்கு முன் வரை யாரும் ஆட்சி அமைக்காத சூழல் நிலவியது. ஏனெனில் ஒருவருக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இந்த நிலையில் சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அஜித் பவாரின் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னவீஸ் அவசர அவசரமாக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

உச்சநீதிமன்றம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் பாஜகவுக்கு உத்தரவிட்டது. இதனிடையே துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் அப்பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நிலைமை உணர்ந்து பட்னவீஸும் ராஜினாமா செய்ததால் பாஜக அரசு கவிழ்ந்தது.

உத்தவ் தாக்கரே
இதையடுத்து அஜித் பவார் மீண்டும் என்சிபிக்கே திரும்பினார். பின்னர் நேற்று முன் தினம் மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவர் இன்றைய தினம் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.

சந்திப்பால் பரபரப்பு
இந்த நிலையில் நாந்தெத் பகுதியின் பாஜக எம்பி பிரதாப் ராவ் கோவிந்தராவ் சிக்காலிகர் அஜித் பவாரை இன்று சந்தித்து பேசினார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில் இந்த சந்திப்பால் பரபரப்பு எழுந்துள்ளது.

கூட்டணி
இதுகுறித்து அஜித் பவார் செய்தியாளர்களிடம் கூறுகையில் பாஜக எம்பி என்னை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். நாங்கள் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்களுக்குள் நல்லுறவு நீடித்து வருகிறது. இந்த சந்திப்பின் போது நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பேசவில்லை. சஞ்சய் ராவத் கூறியது போல் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

பரபரப்பு
மகாராஷ்டிரா அரசியலில் இன்று உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் வரை கூட்டணி கட்சியினர் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு உள்ளதாகவே கூறப்படுகிறது. எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்பதால் மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்?












Click it and Unblock the Notifications