அமிதாப், அபிஷேக் மருத்துவமனையில் அனுமதி.. வீட்டிற்கு சென்ற "பிஎம்சி" டீம்.. கொரோனா வந்தது எப்படி?
மும்பை: கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு இவர்களுக்கு செய்யப்பட கொரோனா சோதனையில், கொரோனா உறுதியானது.
இதையடுத்து இவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் நேற்று இரவில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமிதாப் வீடு
இந்த நிலையில் அமிதாப் வீட்டில் இருந்த மற்றவர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அமிதாப் பச்சன் மனைவி எம்பி ஜெயா பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு, அவரின் குழந்தைக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சனுக்கு செய்யப்பட்ட கொரோனா சோதனையில் முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது.

யாருக்கும் இல்லை
தற்போது அமிதாப் பச்சன் உடல் நிலை நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள். அவர் கொரோனா அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளார். இதனால் அவர் பெரிய அளவில் கஷ்டங்கள் எதையும் அனுபவிக்கவில்லை. இயல்பாக இருக்கிறார். இன்னொரு பக்கம் அபிஷேக் பச்சனும் பெரிய அளவில் பாதிக்காமல் சிகிச்சை பெற்று வருகிறார்.

வீட்டில் சோதனை
இதையடுத்து அமிதாப்பின் மும்பை வீட்டில் இன்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அவர்களின் வீட்டில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது . இதற்காக மும்பை மெட்ரோ கார்பரேஷனின் பிஎம்சி குழு அங்கே சென்றுள்ளது. அந்த வீட்டில் பணியாற்றும் நபர்களின் மாதிரிகளை அவர்கள் எடுத்து உள்ளனர். இவர்களையும் சோதனை செய்ய முடிவு எடுத்து உள்ளனர்.

எப்படி வந்தது
அதோடு பிஎம்சி ஊழியர்கள் இந்த கொரோனா பாதிப்பு தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் எப்படி கொரோனா வந்தது என்று விசாரித்து வருகிறார்கள். அங்கு பணியாற்றும் நபர்கள் மூலம் கொரோனா வந்ததா என்று விசாரிக்கிறார்கள். இது தொடர்பாக தீவிரமாக காண்டாக்ட் டிரேசிங் நடந்து வருகிறது .
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications