துப்பாக்கியால் காலில் சுட்டுக்கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதையடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலையில் வீட்டில் இருந்த போது தவறுதலாக தனது காலில் சுட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
பிரபல பாலிவுட் நடிகரான கோவிந்தா மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 4.45 மணியளவில் வீட்டில் இருந்த போது தவறுதலாக காலில் சுட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. தனது ரிவால்வரை சுத்தம் செய்து கொண்டு இருந்ததாகவும் அப்போது, எதிர்பாராத விதமாக காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்க்ள் கூறியுள்ளனர். காலில் ஏற்பட்ட காயத்திற்காக கோவிந்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் உடல் நலம் தேறிய பிறகு அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
பாலிவுட்டில் பிரபல நடிகர் ஆன கோவிந்தா காலில் துப்பாக்கி கொண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவிந்தாவின் மேலாளர் கூறுகையில், "நடிகரும் சிவசேனா தலைவருமான கோவிந்தா கொல்கத்தாவிற்கு செல்ல இன்று தயாராகிக் கொண்டு இருந்தார். அவரிடம் உரிமம் பெற்ற ரிவால்வர் உள்ளது.
அவர் கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்தது. அப்போது, துப்பாக்கியில் இருந்த குண்டு காலில் பாய்ந்தது. வலியால் துடித்த கோவிந்தா உடனடியாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது. தற்போது உடல் நலத்துடன் உள்ளார்" என்று கூறினார்.
2019 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிதாக படங்களில் கோவிந்தா நடிக்கவில்லை. இருந்தாலும் 80, 90களில் கோவிந்தாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரக கோவிந்தா இருந்தார். எனினும், அதன்பிறகு அவருக்கு திரை வாழ்க்கையில் சரிவு ஏற்பட்டது. 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவில் அவருக்கு படங்கள் எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications