மும்பையின் கொலபாவில் கொட்டித் தீர்த்த மழை.. ஒரே நாளில் 331 மிமீ.. 46 ஆண்டுகள் கழித்து அதிக மழை பதிவு
மும்பை: மகாராஷ்டிரா மாவட்டத்தில் கோலபாவில் கடந்த 24 மணி நேரத்தில் 331 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது. இது 46 ஆண்டுகளில் இல்லாத மழையின் அளவாகும்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அளவில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
இதனால் மும்பையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் தேதி முதல் கனமழை கொட்டியுள்ளது. இரண்டு நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழையால் மும்பையில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை
இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. மருத்துவமனைகளில் வெள்ள நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் கொலபாவில் 331.8 மி.மீ. மழை பதிவானது. மும்பையில் 12 கொலபா பகுதியில் 293.8 மி.மீ. மழை பதிவானது.

கனமழை
ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 46 ஆண்டுகளில் மும்பை தென் பகுதியில் பெய்த மழைகளிலேயே அதிகமான மழை இதுதான். கடந்த 1974ஆம் ஆண்டு மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழையின் 64 சதவீதம் வெறும் 5 நாட்களிலேயே பெய்தது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

பலத்த காற்று
மும்பையில் கடலில் 4.33 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்தன. தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. ராய்காட் மாவட்டத்தில் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் நேற்று பலத்த காற்று வீசியதில் 3 ராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

மழை நீடிக்கும்
மும்பையில் நாயர் மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்ததால் அங்கு நோயாளிகள் கடும் அவதியடைகிறார்கள். மணிக்கு 107 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. அடுத்த சில மணி நேரங்களுக்கும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications