மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப்போவது காங்கிரஸ் கூட்டணிதான்.. விஜய் வசந்த் எம்.பி சொல்லும் சீக்ரெட்!
மும்பை: மகாராஷ்டிராவில் இந்த முறை காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி அமைக்கப் போகிறது என்று உறுதியாக சொல்கிறார் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்பி விஜய் வசந்த்.
மும்பையில் தாராவி உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் விஜய் வசந்த். மகாராஷ்டிரா களத்தில் "ஒன் இந்தியா தமிழ்" குழு நேரடியாக செய்தி சேகரித்து வரும் நிலையில், அங்கிருந்தபடி "ஒன்இந்தியாதமிழ்" எடிட்டர் வீரக்குமரனுக்கு சிறப்பு பேட்டி அளித்தார் அவர்.

பேட்டியின் முழு வீடியோவையும் இந்த லிங்க்கில் கிளிக் செய்து பார்க்கலாம்:
இந்த வருடம் நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி பாஜகவை மிரட்டியது போல சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார் அவர். லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி 17 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றிருந்தது.
சட்டசபை தேர்தலில், கூட்டணி பலத்தால் காங்கிரஸ் கூட்டணி எளிதாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியில் கொண்டு வர உள்ள மேம்பாட்டு திட்டம் பற்றியும் கருத்தை பகிர்வு செய்தார்.
தாராவி மேம்பாட்டு திட்டத்தை பாஜக தங்களுக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபரின் கம்பெனிக்கு கொடுத்திருப்பதாகவும் இதனால் மக்களை காலி செய்ய நிர்பந்திப்பதாகவும், இந்த தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications