துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்! மும்பை மாநகராட்சி தேர்தலில் படுதோல்வி! சிவசேனா கோட்டையை தகர்த்த பாஜக
மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. கடந்த முறையை விட இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது ஒருபுறம் இருக்க சிவசனோவின் கோட்டையாக இருக்கும் மும்பை மாநகராட்சியை பாஜக கைப்பற்றி அசத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 29 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளன. நாட்டிலேயே அதிக மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மாநகராட்சி என்றால் அது மும்பை தான்.
இன்னும் சொல்லப்போனால் சில மாநிலங்களில் பட்ஜெட் மதிப்டை காட்டிலும் மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் மதிப்பு அதிகமாகும். மும்பை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 227 வார்டுகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்றால் 114 வார்டுகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சி மும்பை மாநகராட்சியில் இருந்து துடைத்தெறியப்பட்டுள்ளது. அதாவது மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை படுமோசமாகி உள்ளது. மொத்தம் 15 வார்டுகளில் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளன.
காங்கிரஸ் கட்சி இந்த முறை 152 வார்டுகளில் களமிறங்கியது. மீதமுள்ள வார்டுகளை விபிஏ, ராஷ்ட்ரிய சமாஜ் பக்சா மற்றும் இந்திய சுதந்திர கட்சி (கவாய் பிரிவு) உள்ளிட்டோருக்கு வழங்கியது. இதில் காங்கிரஸ் வெறும் 15 வார்டுகளில் தான் முன்னிலையில் உள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 31 வார்டுகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது சுருங்கி உள்ளது.
மாலை 5 மணி நிலவரப்படி பார்த்தால் பாஜக - சிவசேனா கூட்டணி மொத்தம் 130 வார்டுகளில் முன்னிலை வகித்தது. அதேவேளையில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (உத்தவ் அணி) மற்றும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சி 71 வார்டுகளில் முன்னிலை வகித்தது. இதில் உத்தவ் தாக்கரே அணியின்ர் 62 வார்டுகளிலும், ராஜ்தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியினர் 9 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணி ஒரு வார்டிலும் மட்டுமே முன்னிலை வகித்தது.
மும்பை மாநகராட்சியை எடுத்து கொண்டால் கடந்த 28 ஆண்டுகளாக சிவசேனாவை சேர்ந்தவர் தான் மேயராக இருந்து வந்துள்ளார். இதன்மூலம் கடந்த 1996 க்கு பிறகு முதல் முறையாக மும்பை மாநகராட்சிக்கு பாஜகவை சேர்ந்த ஒருவர் மேயராக உள்ளார். இப்போது அந்த வரலாறு மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications