ஷாரூக் இதை செய்தால் மட்டும் போதும்.. போதை மருந்தெல்லாம் சர்க்கரை பவுடராகிவிடும்!.. மகா அமைச்சர்
மும்பை: போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யான் கானின் தந்தை ஷாரூக் கான் பாஜகவில் இணைந்துவிட்டால் போதை மருந்தெல்லாம் சர்க்கரை பவுடராகிவிடும் என மகாராஷ்டிரா அமைச்சர் சக்கான் புஜ்பால் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா கடற்கரையில் அக்டோபர் 3ஆம் தேதி கோவாவைச் சேர்ந்த கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த கப்பல் பயணிகளை ஏற்றிக் கொண்டு நடுக் கடலுக்கு சென்ற பிறகு இங்கு போதை பொருள் பார்ட்டி நடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்புப் பிரிவினருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மாறு வேடத்தில் பயணிகள் போல் டிக்கெட் பெற்றுக் கொண்டு அந்த கப்பலுக்குள் சென்றனர். அப்போது கப்பல் சிறிது தூரம் சென்றவுடன் சிலர் போதை பொருட்களை வைத்திருந்ததை கண்டனர்.

20 பேர்
உடனே அவர்களை சுற்றி வளைத்தனர். சுமார் 20 பேரை கைது செய்தனர். அந்த 20 பேரில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கானும் ஒருவராவார். இவரது செல்போனை ஆராய்ந்ததில் இவருக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதை அறிந்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜாமீன் மனு தள்ளுபடி
அவரை ஜாமீனில் எடுக்க இரு முறை மனுதாக்கல் செய்தும் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மகனுக்கு ஜாமீன் பெற்று விட ஷாரூக் கான் முயற்சித்து வருகிறார். இதனிடையே நடிகை அனன்யா பாண்டேவிடம் இருந்து ஆர்யான் கான் கஞ்சா வாங்கி பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மும்பை
இந்த நிலையில் ஷாரூக் கானின் மும்பை வீட்டிலும் அனன்யா பாண்டே வீட்டிலும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இன்னும் சிலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

ஷாரூக்கான்
இந்த நிலையில் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த மாநில அமைச்சர் சக்கான் புஜ்பாலிடம் ஷாரூக் கான் மகன் குறித்த வழக்கு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு புஜ்பால் கூறுகையில், இந்த வழக்கெல்லாம் வேண்டுமென்றே புனையப்பட்ட வழக்கு. ஷாரூக் கான் பாஜகவில் இணைந்துவிட்டால், உடனே ஆர்யான் கான் சிக்கிய போதை பொருள் வழக்கு சர்க்கரை பவுடராகிவிடும் என தெரிவித்துள்ளார். பாஜகவில் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். அந்த முயற்சியாக மும்பையில் பாஜகவை மலர வைக்க ஷாரூக் கானை தங்கள் கட்சியில் இணைக்க வைக்க இது ஒரு முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications