மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்ய சொன்ன மகாராஷ்டிரா அமைச்சருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்
மும்பை: மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்ய உத்தரவிட்ட மகாராஷ்டிரா அமைச்சர் அனில் பரப்புக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர்சிங், அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் மீது பரபரப்பான புகாரை கூறியிருந்தார். மும்பையில் உள்ள ஹோட்டல்கள், மதுபான விடுதிகளிடம் இருந்து மாதம் ரூ100 கோடி லஞ்சம் வசூலித்து தர சொன்னார் அனில் தேஷ்முக் என்பதுதான் அந்த புகார்.

பதவி இழந்த அமைச்சர்
இந்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாலேயே பரம்வீர் சிங் பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்றார் அனில் தேஷ்முக். இந்த விவகாரத்தில் அனில் தேஷ்முக் பதவி இழந்தார்.

அனில் பரப்புக்கு சம்மன்
இது தொடர்பான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனில்தேஷ் முக் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அப்போது அனில்தேஷ்முக் மீது கருப்பு பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது. இந்த வழக்கில்தான் சிவசேனா மூத்த தலைவரும் போக்குவரத்து துறை அமைச்சருமான அனில் பரப் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நாராயண் ரானே கைது விவகாரம்
அமைச்சர் அனில் பரப் அண்மையில் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டவர். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று சொன்ன மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை உடனே கைது செய்ய சொல்லி ரத்னகிரி போலீசாருக்கு அனில் பரப் உத்தரவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. இதனையடுத்து மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சிவசேனா சாடல்
இந்நிலையில் அமைச்சர் அனில் பரப்புக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பது மகாராஷ்டிரா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தமது ட்விட்டர் பக்கத்தில், எதிர்பார்த்ததைப் போலவே மக்கள் ஆசீர்வாத பேரணி முடிந்த கையோடு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மத்திய அரசு தன் வேலையை காட்ட தொடங்கிவிட்டது. இந்த விவகாரத்தின் தொடக்கப் புள்ளி ரத்னகிரி சம்பவம்தான். இதை சிவசேனா சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என பதிவிட்டிருந்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications