Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்ய சொன்ன மகாராஷ்டிரா அமைச்சருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்ய உத்தரவிட்ட மகாராஷ்டிரா அமைச்சர் அனில் பரப்புக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர்சிங், அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் மீது பரபரப்பான புகாரை கூறியிருந்தார். மும்பையில் உள்ள ஹோட்டல்கள், மதுபான விடுதிகளிடம் இருந்து மாதம் ரூ100 கோடி லஞ்சம் வசூலித்து தர சொன்னார் அனில் தேஷ்முக் என்பதுதான் அந்த புகார்.

பதவி இழந்த அமைச்சர்

பதவி இழந்த அமைச்சர்

இந்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாலேயே பரம்வீர் சிங் பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்றார் அனில் தேஷ்முக். இந்த விவகாரத்தில் அனில் தேஷ்முக் பதவி இழந்தார்.

அனில் பரப்புக்கு சம்மன்

அனில் பரப்புக்கு சம்மன்

இது தொடர்பான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனில்தேஷ் முக் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அப்போது அனில்தேஷ்முக் மீது கருப்பு பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது. இந்த வழக்கில்தான் சிவசேனா மூத்த தலைவரும் போக்குவரத்து துறை அமைச்சருமான அனில் பரப் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நாராயண் ரானே கைது விவகாரம்

நாராயண் ரானே கைது விவகாரம்

அமைச்சர் அனில் பரப் அண்மையில் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டவர். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று சொன்ன மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை உடனே கைது செய்ய சொல்லி ரத்னகிரி போலீசாருக்கு அனில் பரப் உத்தரவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. இதனையடுத்து மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சிவசேனா சாடல்

சிவசேனா சாடல்

இந்நிலையில் அமைச்சர் அனில் பரப்புக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பது மகாராஷ்டிரா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தமது ட்விட்டர் பக்கத்தில், எதிர்பார்த்ததைப் போலவே மக்கள் ஆசீர்வாத பேரணி முடிந்த கையோடு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மத்திய அரசு தன் வேலையை காட்ட தொடங்கிவிட்டது. இந்த விவகாரத்தின் தொடக்கப் புள்ளி ரத்னகிரி சம்பவம்தான். இதை சிவசேனா சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என பதிவிட்டிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+