இன்னும் 5 வருசம் தான்.. இந்தியாவில் பெட்ரோலுக்கு தேவையே இருக்காது.. நிதின் கட்கரி பூரிப்பு!
மும்பை: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிதின் கட்கரி பேச்சு
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார வாகன பயன்பாடு, பெட்ரோல் - டீசல் பொருட்களின் எதிர்கால தேவை எப்படி இருக்கும் என்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். அதில், இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் - டீசல் பொருட்களுக்கான தேவை இருக்காது. இதனைத்தொடர்ந்து நாட்டில் எரிபொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பெட்ரோலுக்கான மாற்று
இதனால் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பயோ எத்தனால் பயன்படுத்தப்படும் என்று கூறினார். ஏற்கனவே மகாராஷ்டிராவின் விதர்பா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பயோ எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் எதிர்காலத்தில் பயோ எத்தனால் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

விவசாயிகள் பற்றி கட்கரி
இதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் ஆழ்துளை கிணற்று நீரில் இருந்து க்ரீன் ஹைட்ரஜன் தயாரித்து ரூ.70க்கு விற்பனை செய்யும் நிலை வரும். அதோடு விவசாயிகள் இனி உணவை மட்டும் வழங்குபவர்களாக மட்டும் இல்லாமல், இனி வரும் காலங்களில் எரிசக்தி வழங்குபவர்களாகவும் மாற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சத்தீஸ்கர் முன்னிலை
அண்மையில், சத்தீஸ்கர் அரசு 2022ம் ஆண்டுக்கான எலெக்ட்ரிக் வாகன கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தை மின்சார வாகனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து உபகரணங்களுக்கான உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும், மாநில மின்சார வாகன பயன்பாடும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications