மகாராஷ்டிராவில் பயங்கர நிலச்சரிவு- 36 பேர் பலி; மேலும் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்- மோடி இரங்கல்
மும்பை: மகாராஷ்டிராவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நிலச்சரிவுகளில் சிக்கிய 30 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Recommended Video
மும்பையில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மும்பை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் 3 மணிநேரத்தில் 25 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளிலும் கனமழை கொட்டுகிறது. மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்

மும்பை- பெங்களூரு சாலையில் நெரிசல்
மழை வெள்ளத்தால் மும்பை- பெங்களூரு நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. மகாராஷ்டிரா மழை வெள்ள மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ராய்காட் நிலச்சரிவு
இதனிடையே ராய்காட் மாவட்டம் மகத் பகுதியில் மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

30 பேர் கதி என்ன?
நிலச்சரிவுகளில் சிக்கிய மேலும் 30 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் நிலச்சரிவு உயிரிழப்புகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

மோடி இரங்கல்
ராய்காட் நிலச்சரிவியில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ2 லட்சம் வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications