வலைதான்.. உள்ளாடையும் இல்லை.. இப்படி ஒரு டிரஸ்சில் வந்து நின்ற கங்கனா.. நச் அட்வைஸ்!
மும்பை: பெண்கள் தாங்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவர்களுடைய உரிமை, இதில் மற்றவர்கள் அவரவர் வேலையை பாருங்கள் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பொதுமக்களின் நியாயமான போராட்டங்களை கூட கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்து வந்தார்.
இந்த நிலையில் அவர் பெண்களின் உடை குறித்து ஒரு சர்ச்சைக்குரிய போஸ்ட்டை இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். மேலே அணியும் உள்ளாடையை அணியாமல் நெட்டட் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து கொண்டு பேண்ட் போட்டுள்ளார்.

வலை ஆடை
அவர் மேலே அணிந்துள்ள வலை ஆடையால் மார்பகங்கள் தெரியும்படி உள்ளன. எந்த ஆடையை அணியலாம் அல்லது எந்த ஆடையை மறக்கலாம் என்பது முற்றிலும் பெண்களின் விருப்பமும் உரிமையும் ஆகும். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை, அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.

படுகுளோஸ் அப்
மேலும் அடுத்த படத்தில் தனது முன்னழகை படுகுளோஸ் அப்பாக காண்பித்து வெளியிட்ட புகைப்படத்தில் நான் சொல்ல வேண்டிய கருத்தை சொல்லி விட்டேன். நான் என் பணிகளுக்கு செல்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்களை அவர் கடந்த ஆண்டு வெளியான தக்கட் எனும் ஆக்ஷன் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த போது வெளியிட்டிருந்தார்.

கிண்டல்
அவரை அப்போது பலர் கிண்டல் செய்தனர். அண்மையில் ஒரு ரியாலிட்டி ஷோவிலும் கங்கனா படுகவர்ச்சியாக ஆடை அணிந்து வந்திருந்தார். அது போல் கடந்த 2016ஆம் ஆண்டு மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கங்கனா முதுகில் துணி இல்லாமல் திறந்த மேனியுடன் கவர்ச்சியாக வந்திருந்தார். இதை பார்த்துவிட்டு நிறைய பேர் கிண்டல் செய்ததால் அவர் காரில் ஏறி அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார்.

பயோபிக் படம்
இவர் ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவியில் நடித்திருந்தார். அது போல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பயோபிக் படத்திலும் எமர்ஜென்சி காட்சிகளில் நடித்திருந்தார். பின்னர் ஜான்சி ராணி வேடத்திலும் நடித்திருந்தார்.












Click it and Unblock the Notifications