நான்கில் எதுவும் நடக்கும்.. மிக முக்கியமான 24 மணி நேரம்.. மகாராஷ்டிர அரசியலில் உச்சகட்ட பரபரப்பு!
மகாராஷ்டிராவில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 முக்கியமான அரசியல் திருப்பங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 முக்கியமான அரசியல் திருப்பங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் அங்கு அரசியல் தலைவர்கள் களநிலவரத்தை மிக கவனமாக கவனித்து வருகிறார்கள்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஆனால் திடீர் திருப்பமாக அங்கு மீண்டும் பாஜக கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்று இருக்கிறது.
நேற்று முதல்நாள் அதிகாலை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைத்தார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

தீர்ப்பு
மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவிற்கு நவம்பர் 30ம் தேதி ஆளுநர் பகத் சிங் நேரம் கொடுத்தார். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் நேற்றும், இன்றும் விசாரணை நடந்தது.இந்த நிலையில் நாளை இந்த வழக்கில் காலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

சிவசேனா எம்எல்ஏக்கள்
இந்நிலையில் மகாராஷ்டிராவில் பின்வரும் நான்கு விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதன்பின் முதற்கட்டமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பாஜக எப்படியாவது இழுக்க நினைக்கும். தேசியவாத காங்கிரஸ் 53 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. ஆனால் இதில் எல்லோரும் தற்போது சரத் பவார் உடன் இல்லை.

4 பேர்
தற்போது அஜித் பவாருடன் சேர்த்து 4 பேர் அஜித் பவாருடன் இருக்கிறார்கள். இன்னும் சிலர் அஜித் பவாருடன் போனில் தொடர்பில் இருக்கிறார்கள். இதேபோல் இன்னும் பலரை அஜித் பவார் பக்கம் இழுக்க வைத்து. புதிய அணி உருவாக்கி, ஆட்சியை அமைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. இன்னும் 24 மணி நேரத்தில் இதற்கான முயற்சிகள் நடக்கும் என்கிறார்கள்.

இரண்டு என்ன
இரண்டாவதாக பாஜக கட்சி சிவசேனா எம்எல்ஏக்கள் சிலரை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகிறது. சிவசேனாவின் 17 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அணி தாவலாம் என்று செய்திகள் வந்தது. இவர்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்க தீவிரமாக முயன்று வருகிறது.

மூன்றாவது திட்டம்
அதேபோல் இன்னொரு மூன்றாவது அதிர்ச்சியும் மகாராஷ்டிராவில் நடக்க வாய்ப்புள்ளது. அஜித் பவாரை தேசியவாத காங்கிரஸ் மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகிறது . அஜித் பவார் ஒருவேளை மனம் மாறி மீண்டும் சரத் பவார் உடன் இணைய வாய்ப்புள்ளது. அவர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, பாஜகவிற்கு கடைசி நேரத்தில் ஷாக் கொடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

ஆட்சி கவிழும்
கடைசியாக பாஜக நாளை வழக்கில் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கும். அதற்குள் போதுமான எம்எல்ஏக்களை இழுக்க முடியவில்லை என்றால், கர்நாடகாவில் கடந்த வருடம் எடியூரப்பா பதவி விலகியது போல பட்னாவிஸ் பதவி விலக வாய்ப்புள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பட்னாவிஸ் பதவி விலக வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த நான்கு விஷயங்கள் நாளை இரவிற்குள் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications