பசங்க கிரிக்கெட் விளையாட போறாங்களா? பெற்றோர்களே கவனம்! ‘அந்த’ இடத்தில் பந்து..நொடியில் பிரிந்த உயிர்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கோடை விடுமுறையின் போது நண்பர்களோடு கிரிக்கெட் விளையாண்ட சிறுவனின் பிறப்புறுப்பில் பந்து பலமாக தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது பள்ளி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது விடுமுறை என்றாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான்.. ஆனால் அவர்களை கண்காணிக்கும் பெற்றோர்களின் பாடு படுத்திண்டாட்டம்..

வீட்டில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் எப்போது என்ன செய்து வைப்பார்கள் என தெரியாமல் பெற்றோர்கள் குழம்பி தவிப்பதே வழக்கமாகி போய்விட்டது. இதனை பல வீடுகளிலும் நாம் பார்க்க முடியும்.
அதிர்ச்சி சம்பவம்: அதே நேரத்தில் பெற்றோரின் கண்காணிப்பின் கீழ் குழந்தைகளை பார்த்துக் கொள்வது மிக அவசியம். தற்போது நிறைய நீர்நிலைகளில் குழந்தைகள் விழுந்து பலியாகும் சம்பவங்களும் விபத்து உள்ளிட்டவற்றில் சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. எனவே குழந்தைகளை முழுக்க முழுக்க தங்கள் கட்டுப்பாட்டின் கீழே பெற்றோர்கள் வைக்க வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு இல்லை என்றால் மிகப்பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தி இருக்கிறது ஒரு சம்பவம்.
நண்பர்களுடன் கிரிக்கெட்: மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹேகான் பகுதியில் கடந்த வாரம் 11 வயது சிறுவன் கிரிக்கெட் பந்து பிறப்புறுப்பில் பலமாக தாக்கியதில் இறந்துள்ளார். சம்பு காளிதாஸ் கான்ட்வேர் என்ற சவுரியா கோடை விடுமுறையை முன்னிட்டு தனது நண்பர்களுடன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் அதுவே அந்தச் சிறுவனின் கடைசி நாள் என்பது அவரது நண்பர்களுக்கு தெரியாது.
பிறப்புறுப்பில் பந்து: வழக்கம் போல் சவுரியா பேட்ஸ்மேனுக்கு வந்து வீசிக்கொண்டிருந்தார். அதை ஆடிய பேட்ஸ்மேன் அதிவேகமாக ஸ்ட்ரைக் அடித்த நிலையில் எதிர்பாராத விதமாக அந்த பந்து அதிவேகத்தில் நேரடியாக சவுரியாவின் பிறப்புறுப்பில் தாக்கியது. இதனால் வேதனையில் துடித்த சவுரியா அங்கேயே மயங்கி சரிந்தான். உடன் இருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த சிறுவனுக்கு உதவ முயன்றனர். ஆனாலும் சிறுவன் சுய நினைவின்றி இருந்ததை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவனை மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனாலும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.
சிறுவன் மரணம்: மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது தொடர்பாக விமான நிலைய காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். விளையாட்டு என்றால் கூட அது பெற்றோரின் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும் என்பதை சற்று அழுத்தமாக உணர்த்தி உள்ளது இந்த சம்பவம்.












Click it and Unblock the Notifications