என்டிஏவில் இருந்து மொத்தமாக வெளியேறிய சிவசேனா.. எதிர்க்கட்சி வரிசையில் அமரும் எம்பிக்கள்.. டிவிஸ்ட்
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிவசேனா கட்சி லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது.
மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிவசேனா கட்சி லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா அரசியலில் நிலவி வந்த பிரச்சனை இன்னும் முடிவிற்கு வரவில்லை. அங்கு தற்போது சிவசேனா கட்சி ஆட்சி அமைப்பதற்கான சூழ்நிலை உருவாகி வருகிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க உள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் திரை மறைவிலும், வெளிப்படையாகவும் நடந்து வருகிறது. செவ்வாய் கிழமைக்குள் அங்கு ஆட்சி அமையும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

என்ன புகார்
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்ததற்கு சிவசேனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என்று சிவசேனா கூறுகிறது. இதன் மூலம் தங்கள் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிக்கிறது என்று சிவசேனா கூறி வருகிறது.

பொறுப்பு ஆசிரியர்
சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாமனா பத்திரிக்கை முழுக்க இன்று பாஜகவை விமர்சனம் செய்துதான் கட்டுரைகள் வந்துள்ளது. பாஜகவில் எல்லோரும் வயிற்றெரிச்சலில் இருக்கிறார்கள். சிவசேனா இன்னும் 25 வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எப்படி
இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிவசேனா கட்சி லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது. இதற்கான எதிர்க்கட்சிகள் பக்கத்தில் லோக்சபாவில் கடைசி மூன்று வரிசையில் சிவசேனாவிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை சிவசேனா எம்பிக்கள் பாஜகவிற்கு பின் பக்கம் அமர்ந்து இருந்தனர்.

மொத்தமாக வெளியேறிவிட்டது
இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த சிவசேனா எம்பியும் ராஜினாமா செய்துவிட்டார். இதனால் தற்போது மொத்தமாக சிவசேனா மற்றும் பாஜக உறவு முறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications