மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்றுடன் நாளை கரையை கடக்கும் நிசார்கா.. ரெட் அலர்ட்டில் மும்பை
மும்பை: மகாராஷ்டிரா கடலோரம் நிசார்கா புயல் நாளை கரையை கடப்பதால் மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உச்ச கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக மாறியுள்ளது. இதற்கு நிசார்கா என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் ஜூன் 3 ஆம் தேதி அதாவது நாளை கரையை கடக்கிறது. இது மகாராஷ்டிரா- குஜராத் மாநிலம் இடையே கரையை கடக்கும் என்றும் அந்த மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரிடர் குழு
இந்த புயலை எதிர்கொள்ள மகாராஷ்டிராவில் 9 தேசிய பேரிடர் மீட்புப் படை குவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 3 குழுக்களும் பால்காரில் இரு குழுக்களும், தானே, ரெய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் பகுதிகளில் தலா ஒரு பேரிடர் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

வேகம்
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிசார்கா என்பது ஒரு தீவிர புயலாகும். இந்த புயலால் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடலோர கிராமங்களில் இருக்கும் மக்களை வெளியேற்றும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மின் துண்டிப்பு
இதனால் புயல் நேரத்தில் மின் துண்டிப்பு ஏற்படாததை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலால் ஒரு உயிரை கூட இழக்கக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டங்கள்
இதையடுத்து மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் ரெட் அலர்ட் கண்காணிப்பில் உள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேரிடர் மேலாண்மை குழுவினருடன் தொடர்பில் இருந்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த புயல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications