மும்பையில் வெளுத்து வாங்கும் மழை.. சாலைகளில் வெள்ளம்.. ரயில் சேவை பாதிப்பு
மும்பை: இன்று, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் தண்டவாளங்களில் நீர் தேங்கியதால், உள்ளூர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மத்திய ரயில்வேயின் பிரதான பாதை மற்றும் ஹார்பர் பாதையில் உள்ள புறநகர் ரயில்கள் அவற்றின் கால அட்டவணையை விட 20 முதல் 25 நிமிடங்கள் தாமதமாக ஓடுகின்றன.

உள்ளூர் ரயில் சேவைகள் தற்போது சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்களுக்காக மட்டுமே இயங்குகின்றன. பொது பயணிகளுக்கு அனுமதி கிடையாது என்பது நினைவிருக்கலாம்.
காலை 7 மணிக்கு முடிவடைந்த மூன்று மணி நேரத்தில், மும்பையின் ஐலேன்ட் நகரத்தில் 36 மிமீ மழையும், அதன் கிழக்கு மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் முறையே 75 மிமீ மற்றும் 73 மிமீ மழையும் பதிவாகியுள்ளன.
கிழக்கு மும்பையில் உள்ள குர்லா ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தடங்களில் தண்ணீர் வெளியேறுவதால், பிரதான பாதையில் புறநகர் சேவைகள் (சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் குர்லா இடையே) மற்றும் துறைமுக பாதை (சிஎஸ்எம்டி-வாஷி-பன்வெல்) பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
"குர்லா-வித்யாவிஹார் அருகே ரயில் பாதைகளில் பலத்த மழை மற்றும் நீர் வெளியேற்றம் காரணமாக, உள்ளூர் ரயில்கள் 20-25 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன" என்று சிஆரின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் தெரிவித்தார்.

மும்பை மண்டல வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணிநேரங்களுக்கு "நகரத்திலும் புறநகர்ப்பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று கணித்துள்ளது.
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) முன்னதாக நகரத்திலும் புறநகர்ப் பகுதிகளிலும் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications