தலைமை மீது தொடர் விமர்சனம் - கலகக் குரல் சஞ்சய் ஜா காங்கிரஸில் இருந்து அதிரடி சஸ்பெண்ட்!
மும்பை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா அக்கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை ஓராண்டாக நியமிக்கவும் இல்லை.

இந்த கால கட்டத்தில் மத்திய பிரதேசத்தில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ். தற்போது ராஜஸ்தானிலும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா கலகக் குரல் எழுப்பிய பாணியில் ராஜஸ்தானில் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி உள்ளார். இதனால் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் நிலையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களான 2 அமைச்சர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர்.
இந்த பின்னணியில் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து பத்திரிகை ஒன்றில் அதன் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா கட்டுரை எழுதி இருந்தார். இதனால் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனாலும் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து சஞ்சய் ஜா விமர்சித்து வந்தார். மேலும் சச்சின் பைலட்டை புகழ்ந்து சமூக வலைதளங்களில் சஞ்சய் ஜா பதிவிட்டார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications