விடிய விடிய.. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி பார் வசதி ஓட்டல்களுக்கு சிறப்பு அனுமதி

Subscribe to Oneindia Tamil

மும்பை : கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை தினத்தில் பார்வசதி கொண்ட ஓட்டல்களை அதிகாலை 5 மணி வரை திறந்து வைக்க மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் நெருங்கிவிட்ட நிலையில் பல நட்சத்திர விடுதிகளில் புக்கிங் ஆரம்பித்துவிட்டது. சிங்கிளாக பங்கேற்பவர்களைவிட பல ஓட்டல்களில் ஜோடிகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Special permits for bar hotels in Mumbai on Christmas and New Years Eve

இந்தியா முழுவதும் பார்வசதி கொண்ட ஓட்டல்களை அதிக நேரம் இயக்க அனுமதி அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மும்பை நகரில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை தினத்தில் பார்வசதி கொண்ட ஓட்டல்களை அதிகாலை 5 மணி வரை திறந்து வைக்க அம்மாநில காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்ட்ரா மாநில கலால்துறை சூப்பிரண்டு சினேகலதா, கூறுகைடியில், 25 மற்றும் 31-ந்தேதி ஆகிய நாட்களில் மட்டும் பார்வசதி கொண்ட ஓட்டல்கள் அதிகாலை 5 மணி வரையிலும், மதுபான கடைகள் இரவு 1 மணி வரையும் திறந்து வைக்க அனுமதி வழங்கி உள்ளோம் என்றார்.

பொது இடங்களில் மதுபானங்கள் விற்றாலோ மற்றும் அனுமதி பெறாத ஓட்டல்களில் மதுபானங்கள் விற்பது கண்டு பிடிக்கப்பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை வழங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+