டிரைவர் விக்கியை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு.. கொடூரமாக தாக்கிய லாரி உரிமையாளர்கள்
Recommended Video
மும்பை: ஓட்டுநரை கட்டி தொங்கவிட்டு லாரி உரிமையாளர்கள் அடித்து துன்புறுத்தும் காட்சி சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மகாராஷ்டிராவில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக லாரி உரிமையாளர்களை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
விக்கி ஆகிலவ் என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கமலேஸ்வரை சேர்ந்தவர். இவர் அங்குள்ள தனியார் லாரி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். விக்கி எப்போதுமே குடித்துவிட்டு தான் வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

பலமுறை லாரி உரிமையாளர் கண்டித்தும்கேட்க வில்லையாம். விக்கியின் செயல் காரணமாக லாரி நிறுவனத்துக்கு சமீபத்தில் கெட்ட பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம்அடைந்த லாரி உரிமையாளர்கள், அகில் போகனர் கர் மற்றும அமித் தாக்ரே ஆகியோர், ஓட்டுநர் விக்கியை அலுவலகத்துக்குள் அடித்து உதைத்து கயிற்றில் கட்டி தொங்கவிட்டனர். பின்னர் அப்போது விக்கியை சரமாரியாக இருவரும் அடித்து உதைத்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து விசாரணை நடத்திய மகாராஷ்டிரா மாநில போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி உரிமையாளர்கள் அகில் போகன்கர் மற்றும் அமித் தாக்ரே ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications