உதய்ப்பூர் கொலை: வலைதளத்தில் கருத்து கூறிய சிறுமிக்கு கொலை-பலாத்கார மிரட்டல்.. காஷ்மீர் நபர் கைது
மும்பை: நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததாக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் கண்ணையாலால் கொலை செய்யப்பட்ட நிலையில் அதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட மும்பையின் 15 வயது சிறுமிக்கு கொலை மற்றும் பலாத்கார மிரட்டல் விடுத்த காஷ்மீர் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாஜகவின் செய்தி தொடர்பாளாராக இருந்த நுபுர் சர்மா மே மாத இறுதியில் தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து நுபுர் சர்மா தொடர்பாக பிரச்சனைகள் எழுந்து வருகின்றன.

கண்ணையாலால் கொலை
இந்நிலையில் தான் கடந்த மாத இறுதியில் (ஜூன்) 28 ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் டெய்லர் கண்ணையாலால் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரது கடைக்குள் நுழைந்த 2 பேர் அவரது தலையை துண்டித்து கொலை செய்தனர். நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் கொலை செய்ததாக அவர்கள் கூறிய நிலையில் பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்தனர். இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து கொலையாளிகள் மற்றும் உடந்தையாக இருந்தவர்களை கைது செய்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

மும்பை சிறுமிக்கு மிரட்டல்
இந்நிலையில் தான் மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கண்ணையாலால் கொலை தொடர்பாக தனது கருத்தை வீடியோவாக பதிவிட்டு இருந்தார். இதன் தொடர்ச்சியாக அந்த பெண்ணுக்கு போன் செய்த மர்மநபர் ஒருவர் கொலை மற்றும் பலாத்காரம் செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் வாட்ஸ்அப்பிலும் மெசெஜ் செய்து மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் மும்பை விபி ரோடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு விசாரணையை துவங்கினர்.

காஷ்மீர் வாலிபர் கைது
மேலும் சிறுமிக்கு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் ஜம்மு காஷ்மீர் பட்காம் பகுதியை சேர்ந்த பயாஸ் அகமது பட் (வயது 30) என்பவரை கைது செய்தனர். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமராவதியில் கொலை
முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உமேஷ் பிரஹலாத்ராவ் கடந்த ஜூன் 21 இரவில் மெடிக்கல் கடையில் இருந்து டூவீலரில் வீட்டுக்கு சென்றார். அப்போது மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முதாசீர் அகமது (22), ஷாரூக் பதான் (25), அப்துல் தவ்பிக் (24), சோயிப் கான் (22), அதிப் ரசீத் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஷமீம் அகமது பெரோஸ் அகமது தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில் நுபுர் சர்மாவை ஆதரித்து உமேஷ் பிரஹலாத்ராவ் வாட்ஸ்அப் குழுவில் கருத்து பகிர்ந்ததால் அவரை தீர்த்து கட்டியது தெரியவந்தது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications