விநாயகர் சதுர்த்தி விழா ரத்து மும்பை லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் இந்த வருட விநாயக சதுர்த்தி விழாவை ரத்து செய்துள்ளது.
மும்பை: கொரோனா வைரஸ் தொற்றால் மகாராஷ்டிரா மாநிலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடம்பரமாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வாய்ப்பு இல்லை என்ற அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதனையடுத்து மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் இந்த வருட விநாயக சதுர்த்தி விழாவை ரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக அதே இடத்தில் இரத்தம் மற்றும் பிளாஸ்மா தான முகாம் ஒன்றை நடத்த அமைப்பு முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது விநாயகர் சதுர்த்தி. நாட்டின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இங்கு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாடப்படுகிறது. 10 நாள் கொண்டாடப்படும் இந்த விழாவின் போது மாநில தலைநகர் மும்பை பெருநகரம் பத்து நாட்களும் களைகட்டும்.

சர்வஜனிக் மண்டல்களிலும், வீடுகளிலும் மக்கள் சிறியது முதல் பிரமாண்டமான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் அமைப்புகளுடன் கடந்த வாரம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய உத்தவ் தாக்கரே கலந்து விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தின்போது கூட்டம் அதிக அளவில் கூட அனுமதிக்கக் கூடாது என்றும் சமூக பொறுப்பை மனதில் வைத்துக் கொண்டு விழாவை எளிமையாக கொண்டாடி உலக மக்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முதல்வரின் அறிவிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் இந்த வருட விநாயக சதுர்த்தி விழாவை ரத்து செய்துள்ளது. லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் அமைப்பு ஒவ்வொரு வருடமும் விநாயக சதுர்த்தி விழாவைப் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது. பல புதிய அமைப்புக்களுடன் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு பூஜை நடைபெறும்.
லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து பிரம்மாண்ட விநாயகரை வழிபடுவார்கள். திரை பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இங்கு வந்து வழிபட்டு செல்வார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த அமைப்பு விநாயகர் சதுர்த்தி விழாவை ரத்து செய்துள்ளது அதற்குப் பதிலாக அதே இடத்தில் இரத்தம் மற்றும் பிளாஸ்மா தான முகாம் ஒன்றை நடத்த அமைப்பு முடிவு செய்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications