மும்பை தனியார் மருத்துவமனைகளில் குவிந்துள்ள தடுப்பூசி.. மாநகராட்சியிடமிருப்பதை விட 4 மடங்கு அதிகம்
மும்பை: மும்பையில் மாநகராட்சி நடத்தும் தடுப்பூசி மையங்களில் ஸ்டாக் இல்லாத நிலையில், தனியார் மருத்துவமனைகளில் நிறைய கையிருப்பு இருந்தன. இந்த ஏற்றத்தாழ்வுக்கு என்ன காரணம் என்பது பற்றி கேள்விகள் எழுந்துள்ளன.
முந்தைய தடுப்பூசி கொள்கையின் கீழ், மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், தடுப்பூசி உற்பத்தியில் 25 சதவீதத்தை நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்க அனுமதிக்கப்பட்டனர் அல்லவா, அப்போது, மகாராஷ்டிரா மே மாதத்தில் 25.10 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை வாங்கியது.

தனியார் மருத்துவமனைகள், மறுபுறம், 32.38 லட்சம் டோஸ்களை வாங்கியுள்ளன, இது எந்த ஒரு மாநிலத்தை விடவும் அதிகமானது. மகாராஷ்டிரா மாநில தலைநகர், மும்பையில் தனியார் மருத்துவமனைகள் 22.37 லட்சம் டோஸ்களை வாங்கியுள்ளன. இது மும்பை மாநகராட்சியிடம் கையிருப்பு உள்ள, 5.23 லட்சம் டோஸ் அளவை விட நான்கு மடங்கு அதிகம்.
ஏப்ரல் மாதத்தில், தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்க முடியவில்லை என்பதால், அப்போது மும்பை மாநகராட்சி 9.47 லட்சம் டோஸ்களை மாநிலத்திடமிருந்து பெற்றிருந்தது.
இந்த நிலையில், ஜூன் 8 முதல், தடுப்பூசி கொள்கை மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. மாநிலங்களின் அழுத்தம் மற்றும் உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, டிவியில் உரையாற்றியபோது, மாநிலங்கள் நேரடியாக வாங்க அனுமதிக்கப்பட்ட 25 சதவீத தடுப்பூசி அளவை இனி மத்திய அரசே கொள்முதல் செய்யும் என்று தெரிவித்தார்.
மே 1 முதல் ஜூன் 2 வரை மும்பையில் தனியார் மருத்துவமனைகள் 3.34 லட்சம் டோஸ்களை மட்டுமே செலுத்தியுள்ளன. இதன் பொருள், அவர்கள் மொத்த பங்குகளில் சுமார் 15 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தினர். இது தேசிய அளவில் உள்ள சராசரியான 17 சதவீத டோசை விடக் குறைவு.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமீபத்தில் நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மே மாதத்தில் 1.29 கோடி டோஸ்களை வாங்கியதாக தெரிவித்திருந்தது. ஆனால், அவை 22 லட்சம் டோஸ்களை மட்டுமே செலுத்தியது. அவை வாங்கியதில் இது 17 சதவீதம் ஆகும். மற்றவை மருத்துவமனையில் ஸ்டாக்கில் உள்ளன.
மும்பையில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளாலும் வாங்கப்பட்ட டோஸ்களில் கிட்டத்தட்ட 44 சதவீதம் அதாவது, 9.89 லட்சம் டோஸ்கள், சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையால் வாங்கப்பட்டுள்ளது.
சர் எச்.என் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்கள் மருத்துவமனை ஒரு நாளைக்கு 10,000-15,000 டோஸ்களை வழங்கியது. மே மாதத்தில் சுமார் 4.65 லட்சம் டோஸ்கள் போட்டுள்ளோம், என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications