நாகை மலர் மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா.. சிகிச்சை பெற்றவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
நாகை: நாகையில் மலர் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட நிர்வாகம் தொலைப்பேசி எண்கள் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 50க்கும் மேல் உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 58 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 969ஆக உயர்ந்துள்ளது தமிழகத்தில் 44 பேர் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாகப்பட்டினத்தில் மலர் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு தருமாறு நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட மருத்துவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் 9751425002, 9500493022 என்ற எண்களில் தகவல் தரலாம் என்று மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications