ராஜூவ் காந்தி பிரதமராக வர ஓட்டுப்போடுங்க... வாக்கு கேட்ட இந்திய கம்யூ. வேட்பாளர்
நாகப்பட்டினம்: ராஜூவ் காந்தி" பிரதமராக வர வாக்களிக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு வாக்கு கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நாகை மக்களவைத் தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராசு போட்டியிடுகிறார்.
இவர் நாகை அருகே மேலக்கொருக்கை கிழக்கு கடற்கரை சாலையில் செவ்வாய்கிழமை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மத்தியில் ராஜூவ் காந்தி பிரதமராகவும் மாநிலத்தில் ஸ்டாலின் முதல்வராகவும், தங்கள் சின்னம் கதிர் அரிவாளுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
ராகுல் காந்திக்கு பதில் வாய் தவறி அவர் இவ்வாறு கேட்டத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, சிரிக்க ஆரம்பித்தனர்.
70 வருடத்தில் காங்கிரஸால் முடியலை.. நான் மட்டும் 5 வருடத்தில் முடிக்க முடியுமா.. மோடி கேள்வி
இதனால் சுதாரித்துக்கொண்ட வேட்பாளர் செல்வராசு, ராகுல் காந்தி பிரதமராக வர வாக்களிக்குமாறு மீண்டும் பொதுமக்களை பார்த்து கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வுகளால் அந்த பகுதியில் சிறிது நேரம் சிரிப்பலை காணப்ட்டது.