Amrit Bharat Train: 17 மணி நேர பயணம்! ஆமை வேகத்தில் அம்ரித் பாரத்! நாகர்கோவில் பயணிகள் அதிருப்தி
நாகர்கோவில்: புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள நாகர்கோவில் ஜங்ஷன் - மங்களூரு ஜங்ஷன் 'அம்ரித் பாரத்' (Amrit Bharat Train) ரயில் சேவையை வரவேற்கும் அதே வேளையில், அதன் பயண நேரம் மிக அதிகமாக இருப்பதாகப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆமை வேகப் பயணம்
இதுகுறித்து தமிழ் ரயில் தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீண்ட நேரம்: சுமார் 700 கி.மீ தூரத்தைக் கடக்க இந்த ரயில் 17.2 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இது சராசரியாக மணிக்கு 40 கி.மீ வேகம் மட்டுமே.
ஒப்பீடு: 54 நிறுத்தங்களைக் கொண்ட 'பரசுராம் எக்ஸ்பிரஸ்' ரயிலை விட, வெறும் 21 நிறுத்தங்களைக் கொண்ட இந்த 'அம்ரித் பாரத்' ரயில் மெதுவாகச் செல்வது வேடிக்கையாக உள்ளதாகப் பயணிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
காத்திருப்பு: குறிப்பாக, காசர்கோடு முதல் மங்களூரு ஜங்ஷன் வரையிலான பயணத்திற்கு மட்டும் சுமார் 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது (வழக்கமாக 40 நிமிடங்கள் போதும்). இதனால் பயணிகள் தேவையில்லாமல் ரயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது.
நேர அட்டவணைச் சிக்கல்
கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயனாளர்கள் சங்கத்தின் செயலாளர் பி. எட்வர்ட் ஜெனி கூறுகையில், "இந்த ரயிலின் நேர அட்டவணை இரவுப் பயணத்திற்கு ஏற்றதாக இல்லை. பகல் நேரத்தில் ஸ்லீப்பர் வசதியுடன் இயக்குவது பயணிகளுக்குப் பயனளிக்காது," என்றார்.
நாகர்கோவிலில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 11:40 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது. இது மிகவும் நீண்ட பயணமாகும்.
நீட்டிப்பு கோரிக்கை (Extension Demand): இந்த ரயில் சேவையை மேலும் பயனுள்ளதாக மாற்ற, பயணிகள் இரு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:
தெற்கே: நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி (Kanniyakumari) வரை நீட்டிக்க வேண்டும்.
வடக்கே: மங்களூருவில் இருந்து கோவா (Vasco-da-Gama) அல்லது சுப்ரமணியா ரோடு (Subrahmanya Road - குக்கே சுப்ரமணியா கோயில்) வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு நீட்டிப்பதன் மூலம், கன்னியாகுமரி முதல் கோவா வரையிலான ஒரு நேரடி இணைப்பாகவும், அல்லது புகழ்பெற்ற குக்கே சுப்ரமணியா கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வசதியாகவும் இது அமையும் எனப் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தற்போது 3 அம்ரித் ரயில்கள் கிடைத்துள்ளன. திருச்சியில் இருந்து நியூ ஜல்பாய்குரிக்கு (20610) அம்ரித் பாரத் ரயில், நாகர்கோவிலில் இருந்து நியூ ஜல்பாய்குரிக்கு (20604) அம்ரித் பாரத் ரயில், தாம்பரம் - சந்திரகாச்சி வாராந்திர அம்ரித் பாரத் ரயில் (16107) ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அம்ரித் பாரத் என்றால் என்ன?
அம்ரித் பாரத் என்பது குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகள் கொண்ட விரைவு ரயில்களாகும். இவை 800 கி.மீ. தொலைவில் உள்ள நகரங்களுக்கிடையே இயக்கப்படுகிறது.இவை கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 22 பெட்டிகளை கொண்டது. 10 படுக்கை பெட்டிகளும் 10 பொது பெட்டிகளும் இருக்கும். பார்சல்களை கொண்டு செல்ல இரு பெட்டிகளும் இருக்கும். இது மணிக்கு 110 முதல் 130 கி.மீ. வேகத்தில் செல்லும்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications