Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி மரணம்.. அம்மா, தம்பி உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல்லில் தனியார் ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த ஹோட்டலில் தாய் அவரது மாமா, அத்தை அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த தவக்குமார் என்பவரது மனைவி சுஜாதா (38).இவர தனது மகள் கலையரசி (14) மகன் பூபதி (12) ஆகியோருடன் கடந்த 16ஆம் தேதி நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது சுஜாதாவின் அண்ணன் சினோஜ் (56), அண்ணி கவிதா (50) ஆகியோரும் அவர்களுடன் சென்றுள்ளனர். அங்கு சவர்மா உள்ளிட்ட இறைச்சி உணவு வகைகளை பார்சல் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

A schoolgirl who ate shawarma in a private hotel in Namakkal died in hospital

ஹோட்டலில் வாங்கி வந்த உணவுகளை வீட்டில் சாப்பிட்ட நிலையில், கொஞ்ச நேரத்தில் கலையரசி உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவியுடன் உணவு சாப்பிட்ட தாய் அவரது மாமா, அத்தை அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அதே நாள் இரவு இந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 11 மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தை அடுத்து குறிப்பிட்ட ஹோட்டலுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சீல் வைத்து உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+