10 லட்சத்தில் ஒன்றுதான் இப்படி இருக்கும்..அதிசய கரடி.. ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட உடன் நிகழ்ந்த சோகம்
நியூயார்க்: உலகின் மிக அரிதான வெள்ளை நிற கரடியை அமெரிக்காவில் சிலர் படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றியிருந்தனர். ஆனால் அக்கரடி சில நாட்களிலேயே ஓநாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 லட்சம் கரடிகளில் ஒரேயொரு கரடி மட்டும்தான் இதுபோன்று வெண்மையாக இருக்கும். இது பனி கரடி அல்ல. எனவே இது மிக அரிதான ஒன்றாக கருதப்படுகிறது.
இவ்வாறு இருக்கையில், இந்த கரடி தற்போது உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது காட்டுயிர் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெண்மை நிற கரடி
அமெரிக்காவின் மிக்சிகனில் உள்ள வனப்பகுதியில் இந்த கரடி முதன் முதலாக செப்டம்பர் 6ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. 'யூப்பர் அவுட்டோர்ஸ் #906' எனும் பேஸ்புக் குரூப்பில் இந்த கரடியின் படங்கள் பகிர்ந்திருந்தன. இந்த குழுவில் உள்ளவர்கள் சமீபத்தில் வனப்பகுதிக்குள் செல்லும்போது இந்த படங்களை எடுத்து பதிவேற்றியுள்ளனர். இது உலகம் முழுக்க வேகமாக பரவியது. ஏனெனில் 10 லட்சம் கரடிகளில் ஒரு கரடிதான் இதுபோல வெண்மை நிறத்தில் பிறக்கும்.

ஒன்றே ஒன்று
ஆனால் துர்திஷ்டவசமாக இந்த கரடி ஓநாய் கடித்து உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே அரிய வகை கரடி ஒன்று உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வனப்பகுதியில் பயணிப்பவர்களுக்கு வழிக்காட்டுவதற்காக குழு ஒன்று செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த குழுதான் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் இந்த தகவலை கூறியுள்ளது. இதனையடுத்து பேஸ்புக் குரூப்பிலும் இந்த தகவல் பகிரப்பட்டது.

பரிதாபமாக உயிரிழப்பு
அதாவது, நம்மூரில் அதிகமாக உள்ள ஓநாய்களால் அரிய உயிரினங்களில் ஒரு விலங்கு அழிக்கப்பட்டுள்ளது என்று 'யூப்பர் அவுட்டோர்ஸ் #906' எனும் பேஸ்புக் குரூப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகை வெள்ளை கரடி, முழுமையாக வெண்மையாக இருக்காது. மாறாக உடல் முழுவதும் வெண்மை நிறமும் அதேபோல கழுத்து மட்டும் லேசான பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதற்கு முன்னர் மிக்சிகன் பகுதியில் இதுபோன்ற வெண்மை நிற கரடியை யாரும் பார்த்ததில்லை.

நம்பிக்கை
உலகம் முழுவதுமே இந்த வகை கரடிகள் வெறும் 100 மட்டுமே இருக்கிறது. இந்த கரடி குறித்த ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மிக்சிகனில் சுமார் 1 லட்சம் கரடிகள் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதில் நீங்கள் வெள்ளை கரடியை பார்ப்பது மிக மிக அரிதானது. அப்பகுதி பழங்குடியின மக்கள், இந்த வெள்ளை கரடியின் வருகையை நல்ல காலத்தின் பிறப்பு என்று கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications