ஷாக் மேல் ஷாக்.. முதலில் பெரியவர்கள்.. அடுத்தடுத்து குழந்தைகள்.. கிலி தரும் தொற்று.. கதறும் வல்லரசு
அமெரிக்காவில் 2 லட்சம் குழந்தைகளை தாக்கி உள்ளது கொரோனாவைரஸ்
நியூயார்க்: 2 லட்சம் குழந்தைகளை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாம்.. இது அமெரிக்க மக்களுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தி வருகிறது.
உலகத்தையே இந்த கொரோனா வைரஸ் தன் பிடியில் வைத்து வருகிறது.. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடிந்திருக்கிறதே தவிர, முற்றிலும் ஒழிக்க முடியவில்லை..
இதற்கான ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து வருகையில்தான், ஒமிக்ரான் வைரஸ் பரவல் ஆரம்பமாகி உள்ளது.. இது இரட்டிப்பு கலக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தியும் வருகிறது.

அமெரிக்கா
இந்த பாதிப்பில் கடந்த 2 வருடங்களாகவே முதலிடத்தில் உள்ளது அமெரிக்காவாகும்.. மிக அதிகமாகத் தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளது என்று கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது.. அதாவது, கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வந்த இந்த தொற்று, ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டபிறகு, பரவலில் வேகமெடுத்துவிட்டதாம்..

கொரோனா கேஸ்கள்
கொரோனாவால் புதிய கேஸ்கள் மட்டும் ஒரே வாரத்தில் 15 லட்சத்தை கடந்துள்ளது.. அமெரிக்கா மட்டுமில்லை, பெரும்பாலான நாடுகளில் டெல்டா வகை வைரஸ்தான் அதிகமாக பரவி இருந்தாலும், ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டபிறகு இந்த பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் அந்த அரசு திணறி வருகிறது..

குழந்தைகள்
இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்... நேற்று ஒரே நாளில் மட்டும் 5,44,67 பேருக்கு கொரோனா கேஸ்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா, பச்சிளம் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.. கடந்த சில நாட்களாகவே, அமெரிக்காவில், ஒரு வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களை கொரோனாவைரஸ் பெருமளவில் பாதித்து வருவதாக கூறப்படுகிறது..

அதிகரிப்பு
கடந்த மாதத்தை விட இந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் இரட்டிப்பாக அதிகரித்துவிட்டது.. கடந்த வாரம் தொற்று பாதிப்பினால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 99 ஆயிரமாக உயர்ந்துவிட்டது.. இது 61.1 சதவீதம் அதிகம் என்கிறார்கள்.. இப்படி 2 லட்சம் குழந்தைகள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களுக்கு பெருத்த கவலையையும் கிலியையும் ஏற்படுத்தி வருகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications