Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்த அமெரிக்காவும் பதற்றத்தில் உறைய.. சாலையில் இறங்கிய FBI.. சார்லி கிர்க்கை சுட்டது யார்? ஷாக்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் தீவிர வலதுசாரி அரசியல் ஆர்வலர் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய கூட்டாளியான கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவையே உலுக்கி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முக்கிய ஆதரவாளரும், கன்சர்வேட்டிவ் ஆர்வலருமான சார்லி கிர்க் (31), உட்டா மாகாணத்தில் நடந்த கல்லூரி நிகழ்வு ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். இளம் ரிபப்ளிகன் வாக்காளர்களை அணிதிரட்டுவதில் இவர் முக்கியப் பங்காற்றினார்.

Charlie Kirk

"தி அமெரிக்கன் கம்பேக் டூர்

கிர்க்-கின் "தி அமெரிக்கன் கம்பேக் டூர்" என்ற கல்லூரி சுற்றுப்பயணம், கொலராடோ முதல் விர்ஜினியா வரை இளம் வாக்காளர்களை டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக ஒன்று திரட்டும் நோக்கில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது தாக்குதல் நடைபெற்றது. கொலையாளியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

"இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது," என யூட்டா பொது பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியது. எஃப்.பி.ஐ. மற்றும் உள்ளூர் காவல் துறையுடன் இணைந்து செயல்படுவதாகவும் அது தெரிவித்தது. இச்சம்பவம் தொடர்பாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், ஆனால் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

சார்லி கிர்க் சுட்டுக் கொலை

ஆனால் அங்கே இதுவரை உண்மையான கொலையாளி கைது செய்யப்படாதது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யூட்டா ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ், துப்பாக்கி சுட்டவரின் நோக்கம் மற்றும் அடையாளம் தெளிவாக இல்லாத நிலையிலும், இது ஒரு அரசியல் கொலை எனக் கூறினார். யூட்டா பொது பாதுகாப்புத் துறையின் ஆணையர் பியூ மேசன், சந்தேகநபர் கருப்பு உடை அணிந்திருந்ததாகவும், கட்டிடத்தின் கூரையிலிருந்து தொலைதூரத்திலிருந்து சுட்டிருக்கலாம் என்றும், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஓவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட வீடியோ செய்தியில், குற்றவாளியை கண்டுபிடிப்போம் என்று ட்ரம்ப் சூளுரைத்தார். ஆனால் கொலை நடந்து 12 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் கொலையாளி கண்டுபிடிக்கப்படாதது அமெரிக்காவையே உலுக்கி உள்ளது.

துப்பாக்கி சூடு நடந்தது எப்படி?

சால்ட் லேக் சிட்டிக்கு அருகிலுள்ள ஓரம், யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் (UVU) சுமார் 3,000 பேர் கொண்ட கூட்டத்தில் கிர்க் பேசிக் கொண்டிருந்தபோது சுடப்பட்டார். துப்பாக்கிச்சூட்டிற்கு சற்று முன்பு, துப்பாக்கி வன்முறை குறித்து ஒரு பார்வையாளர் கிர்க்கிடம் கேள்வி கேட்பது போன்ற வீடியோ காட்சிகள் ஆன்லைனில் வெளியாகின.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் மாணவர்கள் சிதறி ஓடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. கிர்க் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கொலை தொடர்பாக எஃப்.பி.ஐ. இயக்குநர் காஷ் படேல், ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டதாக எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். "சந்தேகநபர் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். எங்கள் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது, வெளிப்படைத்தன்மைக்காக தகவல்களை தொடர்ந்து வெளியிடுவோம்" என்று அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+