இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகளை அரசு மதிக்க வேண்டும்.. அமெரிக்க அரசு அதிரடி அறிக்கை!
இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் உரிமைகளை அரசு மதித்து நடக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நியூயார்க்: இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் உரிமைகளை அரசு மதித்து நடக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தம் கடந்த வாரம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுக்க பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இன்னொரு பக்கம் டெல்லி, சென்னை, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே என்று பெரு நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டங்கள் குறித்து அமெரிக்க அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

அரசு அறிக்கை
அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.இதில் ஏற்படும் மாற்றம் கூர்மையாக கவனித்து வருகிறோம்.மக்களின் அமைதியான போராட்டங்களுக்கு அரசு அனுமதி தர வேண்டும். மக்கள் அமைதியாக ஒன்று கூடுவதற்கு உரிமை உள்ளது.

ஆனால் மக்கள்
ஆனால் மக்கள் யாரும் கலவரத்தில் ஈடுபட கூடாது. கலவரம் செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். மக்களின் மத சுதந்திரத்தை அரசு மதித்து நடக்க வேண்டும்.அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் ஜனநாயக நாடுகள்.

சமமாக நடத்தப்பட வேண்டும்
இந்தியாவில் மக்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். அரசு சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் உரிமைகளை அரசு காக்க வேண்டும்.

உரிமை முக்கியம்
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அவர்களின் உரிமையை காக்க வேண்டும். இந்தியாவின் ஜனநாயக தன்மை காக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதனால் தற்போது உலக நாடுகள் எல்லாம் இந்தியாவின் பக்கம் தனது பார்வையை திருப்பி உள்ளது.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications