மூக்கை உடைத்து கொண்ட டிரம்ப்.. எலான் மஸ்க்கால் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய ஃபைல்களை, எலான் மஸ்க்கின் டீம் அணுக முயற்சித்தது. ஆனால் இதற்கு நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. அதிபராக இருந்தும் கூட, டிரம்பால் நினைத்ததை செய்ய முடியாமல் நீதிமன்றம் கட்டுப்பாடை விதித்திருப்பது, அந்நாட்டில் விவாதமாக வெடித்திருக்கிறது.

அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல தடாலடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில், எலான் மஸ்க்கை சேர்த்துக்கொண்டு அரசு துறைகளை காலி செய்ய தனியாக ஒரு துறையை டிரம்ப் உருவாக்கியிருந்து பேசுபொருளாகியிருந்தது.

elon musk us trump

இப்படி இருக்கையில்தான் எலான் மஸ்க் மூலமாக, டிரம்ப்பின் மூக்கு உடைந்திருக்கிறது. அதாவது எலான் மஸ்க் தனக்கு கீழே 6 இளைஞர்களை கொண்ட ஒரு டீமை உருவாக்கினார். இதற்கு DOGE என்றும் பெரியரிடப்பட்டது. அதாவது Department of Government Efficiency என்பதுதான் இதன் அர்த்தம். அமெரிக்காவில் FBI, NASA, CIA போல மொத்தம் 400 பொதுத்துறைகள் இருக்கின்றன. எலான் மஸ்க்கின் DOGE டீமின் வேலை என்னவெனில், இந்த துறைகளில் எது சரியாக செயல்படவில்லையோ அதை ஒழித்துக்கட்டுவதுதான்.

அதேபோல மொத்தமுள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை 75% ஆக குறைக்க வேண்டும். இதன் மூலம் அமெரிக்க அரசின் செலவுகள் குறையும் என்று டிரம்ப் கணக்கு போடுகிறார். எல்லாம் சரிதான். ஆனால் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள்தான் சரியில்லை. குறிப்பாக எலான் மஸ்க்கும், அவருடைய DOGE டீமும் இந்த விஷயத்தில் எந்த முன் அனுபவமும் கொண்டிருக்காத ஆட்கள். இந்த டீம் அமெரிக்க கருவூலத்தின் டேட்டாக்களை (Data) அணுக முயன்றிருக்கிறது. ஆனால் நீதிமன்றம் இந்த விஷயத்தில் மஸ்க்கின் மூக்கை உடைத்திருக்கிறது.

தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதற்காகவே, ஒட்டு மொத்த அமெரிக்கர்களின் தனிப்பட்ட விவரங்களையும் எப்படி இவர்களிடம் நம்பி கொடுப்பது? என்று அரசு ஊழியர்கள் மற்றும் சில தொழிற்சங்கங்கள் சார்பில் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அதில், “அரசு ஊழியர்கள் உட்பட ஒட்டுமொத்த அமெரிக்க மக்களின் தரவுகள் இந்த கருவூலத்தில் இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொருவரின் தனிப்பட்ட உயிரியல் அடையாளங்கள் (கருவிழி, கைவிரல் ரேகை உள்ளிட்ட அடையாளங்கள்), முகவரி, மக்கள் தொகை, சமூக பாதுகாப்பு எண்கள் (அமெரிக்கர்களின் ஆதார் எண்) ஆகியவை இருக்கின்றன. இதனை இவர்களை நம்பி எப்படி கொடுப்பது?” என்று கேள்வி எழுப்பினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி கொல்லர்-கொட்டெல்லி (Kollar-Kotelly), “உங்க இஷ்டதுக்கு எல்லாம் எல்லோரையும் கருவூலத்திற்குள் நுழைய அனுமதிக்க முடியாது. 2 பேருக்கு மட்டும் தற்காலிகமாக அனுமதி கொடுக்கிறேன். சத்தமில்லாம போய் பார்த்துட்டு வந்துடனும். படிக்க மட்டும்தான் அனுமதி. அங்கிருந்து தகவல்களை வெளியே எடுத்து வர கூடாது” என்று அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார். வழக்கு விசாரணை தற்போது ஒத்தி வைக்கப்படுகிறது. வழக்கின் தீர்ப்பு அடுத்தடுத்த விசாரணைகள் முடிந்த பின்னர்தான் தெரிய வரும்.

இதானல் எலான் மஸ்க்குக்கும், அவரை நம்பியிருந்த டிரம்புக்கும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு குறித்து பேசும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள், எலான் மஸ்க்கால் இன்னும் எங்கெல்லாம் டிரம்ப் பின்னடைவை சந்திக்கப்போகிறாரோ! என கேள்வி எழுப்பி வருகின்றனர். நீங்க என்ன நினைக்கிறீர்கள் மக்களே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+