கப்பலேறிய இந்தியாவின் மானம்.. வீட்டு வேலை செய்யாத கணவரின் கழுத்தை அறுத்து.. அமெரிக்காவே ஆடிப்போச்சு
நியூயார்க்: கணவனை மனைவி டார்ச்சர் செய்வது, மனைவியை கணவன் டார்ச்சர் செய்வது போன்ற குடும்ப வன்முறைகள் உலக நாடுகளில் சர்வ சாதாரணமாகிவிட்டது. அமெரிக்காவில் ஒரு தம்பதி கோர்ட் வரை சென்றிருக்கிறார்கள்.. இவர்கள் இருவரும் இந்திய வம்சாவளி தம்பதி என்பது கூடுதல் விஷயமாகும். சாதாரண குடும்ப சண்டை கோர்ட் வரை சென்று, கரோலினா மாகாணத்தில் பரபரப்பையும் தந்து விட்டது. என்ன நடந்தது தெரியுமா? யாரிந்த பெண்?
அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தில் இப்படி ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது.. சார்லட் நகரில் வசித்து வருகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த அரவிந்த்.. இவருக்கு 50 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் சந்திரபிரபா சிங்.. அவருக்கு 44 வயதாகிறது

அமெரிக்கா தம்பதி
கரோலினா மாகாணத்திலேயே எண்ட்ஹேவன் தொடக்க பள்ளி ஒன்றில் சந்திரபிரபா சிங் உதவி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.. இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி விடுமுறை தினத்தன்று, அதாவது அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வீட்டை சுத்தம் செய்யாதது தொடர்பாக தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு சென்றுவிட்டார் சந்திரபிரபா. உடனே கிச்சனுக்கு ஓடிச்சென்று காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து, கணவரின் கழுத்தை அறுத்துவிட்டார்.
அவசர உதவி எண்
இதில் படுகாயமடைந்த அரவிந்த், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.. பிறகு சுதாரித்து கொண்டு, அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்தார்.. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து உடனே வந்த போலீசார், உயிருக்கு போராடி கொண்டிருந்த அரவிந்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்போது போலீசாரிடம் அரவிந்த் புகார் தந்தார்.. அதில், வீட்டு வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த மனைவி, என்னை வேண்டுமென்றே கத்தியால் அறுத்துவிட்டார்" என்று வாக்குமூலம் தந்தார்.. உடனே போலீசார் இதுகுறித்து சந்திரபிரபாவிடம் விசாரித்தனர்.. ஆனால், சந்திரபிரபா , கணவரின் குற்றச்சாட்டை மறுத்துவிட்டார்..
யதேச்சையாக கத்தி
இதுகுறித்து போலீசாரிடம் அவர் சொல்லும்போது, "நான் காலையில் டிபன் செய்து கொண்டிருந்தேன். அப்போது என் கையில் கத்தி இருந்தது.. அந்த நேரம் பார்த்து, என் கணவர் வந்தார்.. நான் யதேச்சையாக கையில் கத்தியுடன் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக கணவரின் கழுத்தில் வெட்டுப்பட்டு விட்டது" என்றார்,.எனினும், சந்திரபிரபா சொன்ன காரணத்தை போலீசாரால் ஏற்க முடியவில்லை.. உடனே இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சந்திரபிரபாவை கைது செய்தனர்.
சட்டவிரோதமாகவும், உள்நோக்கத்துடனும் கொடூரமாக கணவரின் கழுத்தை அறுத்ததாக சந்திபிரபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு இந்த வழக்கு கோர்ட் வரை சென்றது..
உள்நோக்கம் - கைது
அப்போது தனக்கு ஜாமீன் வேண்டும் என்று சந்திரபிரபா கோரினார்.. முதலில் அவருக்குப் ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், பிறகு 10,000 டாலர் ஜாமீனில் அவரை விடுவித்தது. இப்போது அவர், மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கணவரின் கழுத்தை அறுத்தது, கைது, கோர்ட் என்று இந்த சம்பவம் கரோலினா மாவட்டம் முழுவதும் பரபரத்தது.. இதையடுத்து, பள்ளியில் பணியாற்றி வந்த சந்திரபிரபாவை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்டு செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications