கணிதமேதை ராமானுஜர் பெயரில் கவுரவ பேராசிரியர்.. அமெரிக்க பல்கலைக்கு ரூ. 7 கோடி வழங்கிய இந்திய தம்பதி!
நியூயார்க்: தமிழரான கணிதமேதை ராமானுஜத்தைக் கவுரவிப்பதற்காக அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளனர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி.
காலத்தால் அழியாத கணித மேதைகளுள் ஒருவராக போற்றப்படுபவர் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாச ராமானுஜர்.

இந்நிலையில் ராமானுஜத்தை கவுரவிக்கும் விதமாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் கவுரவப் பேராசிரியரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் அங்கு வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வரதனும், அவரது மனைவி வேதாவும்.
ஓய்வு பெற்ற கணித பேராசிரியரான வரதன், இதற்காக ஒரு மில்லியன் டாலர் பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். இந்திய மதிப்பில் இது ரூ. 7 கோடி ஆகும்.
வரதனின் கோரிக்கையைத் தொடர்ந்து ராமானுஜன் பெயரில் கவுரவ பேராசிரியரை நியமிக்க பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications