குழம்பிய ஜிபிஎஸ்! வான்வெளி மூடல்! அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவிய 6 ஏவுகணைகள்! உலகப்போர் ஆரம்பம்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: எதிர்பார்த்தபடியே அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவ நிறுவங்களில் ஒன்றான கத்தாரில் உள்ள அல் உடேத் விமானத் தளம் உட்பட பல தளங்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

கத்தார் மீது ஆறு ஏவுகணைகளும், ஈராக் மீது ஒரு ஏவுகணையும் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்கள் இரண்டுமே அந்த நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளை இலக்காகக் கொண்டவை என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடி

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேல் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டில் உள்ள 3 அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.

Iran attacks USA bases in Qatar with its 6 missiles War goes out of hand now

ஃபோர்டோவில் உள்ள முக்கியமான தளத்தில் முழு அளவிலான வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பத்திரமாக திரும்புகின்றன. இந்த சாதனையை நிகழ்த்திய அமெரிக்க வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகில் இதை செய்யக்கூடிய ராணுவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமைதிக்கு இதுவே சரியான நேரம்! இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
பதிலடி

"பஷாரத் அல்-ஃபத்" நடவடிக்கை

இந்த நிலையில்தான் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவப் தளவாடங்களை குறிவைத்து "பஷாரத் அல்-ஃபத்" என்ற பெயரில் இந்த தாக்குதலை ஈரான் அறிவித்துள்ளது.

எதிரொலியாக கத்தார் வான்வெளியை மூடியது

இந்தத் தாக்குதலை எதிர்பார்த்து கத்தார் தனது வான்வெளியை மூடியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போர் விமானங்கள் பாரசீக வளைகுடா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரைந்துள்ளன. கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகம் அங்குள்ள மக்களை வெளியேறும்படி அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க குடிமக்களையும் உடனடியாக மறைவான, தாழ்வான தங்குமிடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளது.

ஜி.பி.எஸ் சிக்னல் ஜாமிங்

அதே நேரத்தில் பாரசீக வளைகுடா முழுவதும் பரவலான ஜி.பி.எஸ் சிக்னல் ஜாமிங் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் வழிசெலுத்தலில் பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது. கத்தாரில் ஈரான் நடத்திய முதல் உறுதிப்படுத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் இதுவாகும். அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் படைகள் சக்திகள் ராணுவ நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதால் நிலைமை மிகவும் பதட்டமாக உள்ளது.

ஈரானின் இந்த நடவடிக்கையானது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. உலக நாடுகள் இப்பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த போர் முழுமையான உலகப்போராக உருவெடுக்கும் அபாயங்கள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+