ரூ.13500 கோடி மோசடி.. குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது
நியூயார்க்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் வெளிநாடு தப்பித்து சென்ற குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி ஏற்கனவே லண்டனில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தை சேர்ந்தவர் நீரவ் மோடி. வைர வியாபாரி. இவர் மீது பணமோசடி குற்றச்சாட்டு எழுந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்துவிட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இதையடுத்து நீரவ் மோடி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பித்து சென்றனர்.
நீரவ் மோடி லண்டனில் பதுங்கினார். கடந்த 2019ம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் லண்டன் சிறையில் உள்ளார். அவரை நாடு கடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நீரவ் மோடியின் சகோதரானர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது பணமோசடி மற்றும் குற்றவியல் சதி மற்றும் ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான் இந்தியா விடுத்த கோரிக்கையை தொடர்ந்து அமெரிக்காவில் நேஹல் மோடியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications