இந்த போட்டோவை பாருங்க.. அமெரிக்காவிற்கு சத்தமின்றி ஆப்பு வைத்த ஈரான்.. இது லிஸ்டுலேயே இல்லையே
நியூயார்க்: எஸ்பஹான், நடான்ஸ் மற்றும் ஃபோர்டோவ் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அங்கிருந்த யுரேனியத்தை ஈரான் வெளியே எடுத்து சென்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன. இதற்கான செயற்கைகோள் புகைப்படங்களும் வெளியாக உள்ளன.
ஜூன் 19-20 தேதிகளில் அந்த அணு வசதியின் நுழைவாயிலுக்கு அருகில் கனரக இயந்திரங்களுடன் 16 லாரிகள் கூடியிருந்தன. இதற்கான படங்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாப்பின் மூத்த ஆலோசகர் மெஹ்தி முகம்மதி சமூக ஊடகத்தில் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ஃபோர்டோ மீது பல இரவுகளாக தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எதிர்பார்த்து இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்
அமெரிக்காவின் தாக்குதல்கள் குறித்து மெஹ்தி முகம்மதி மேலும் கூறுகையில், "அந்த தளம் நீண்ட காலத்திற்கு முன்பே காலி செய்யப்பட்டது. அதனால் பெரிய சேதம் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. அறிவை யாராலும் வெடிகுண்டு போட்டு அழிக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரான்- இஸ்ரேல் போருக்குள் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நுழைந்து உள்ளது. அமெரிக்கா இதில் நேரடியாக தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளதால்.. அடுத்த கட்டமாக ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள், ஈரான் ஆதரவு நாடுகள் போரில் தலையிட வாய்ப்புகள் உள்ளன.
This seems important. Before the U.S strikes on Esfahan, Natanz and Fordow, @Maxar satellite images showed a possible increase in logistics at Fordow - 16 trucks gathered on 19- 20 June with heavy machinery near the entrance to the main facility. pic.twitter.com/dakj6aFbVS
— John Pollock (@John_Pollock22) June 22, 2025
ஈரானை தாக்கிய அமெரிக்கா
இஸ்ரேல் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டில் உள்ள 3 அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார். இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.
ஃபோர்டோவில் உள்ள முக்கியமான தளத்தில் முழு அளவிலான வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பத்திரமாக திரும்புகின்றன. இந்த சாதனையை நிகழ்த்திய அமெரிக்க வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகில் இதை செய்யக்கூடிய ராணுவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமைதிக்கு இதுவே சரியான நேரம்! இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
உலகப்போர் உருவாகும் அபாயம்
டிரம்ப் செய்த இந்த செயல் இந்த போரை பெரிதாக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா ஈரான் மீது குண்டு போட்டு உள்ளதால்.. ஈரான் பதிலடி தரும் வாய்ப்புகள் உள்ளன. இது நேட்டோவின் போராக மாறும். ஏனென்றால் அமெரிக்கா குண்டு போட்டால் அதற்கு ஈரான் பதிலடி தரும். இதனால் நிலைமை மோசமாகி நேட்டோ போரில் தலையிடும். இதற்கு பதிலடி ரஷ்யா கண்டிப்பாக போரில் குதிக்கும். ஈரான், ரஷ்யாவிற்கு துணையாக பல இஸ்லாமிய நாடுகள் களமிறங்கும். ஏன் சீனாவும் கூட களமிறங்கி தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. டிரம்ப் செய்த இந்த தவறு.. 3ம் உலகப்போருக்கு வித்திடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இஸ்ரேலை பொதுவாக ஆதரிக்கும் நாடுகள், ஈரானை ஆதரிக்கும் நாடுகள் மற்றும் நடுநிலையான நாடுகள் பற்றி இங்கு காணலாம். இந்த நாடுகள் போரில் குதிக்கும் பட்சத்தில் அது 3ம் உலகப்போராக கண்டிப்பாக மாறும்.












Click it and Unblock the Notifications