Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொதுவில் மக்கள் முன்! மன்னிப்பு கேட்க வேண்டும்! இல்லைன்னா.. உக்ரைன் அதிபருக்கு டிரம்ப் எச்சரிக்கை?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: வெள்ளை மாளிகையில் நடந்த கடுமையான சண்டைக்கு பின்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மக்கள் முன் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாராம். அதிகாரபூர்வமாக இதை தெரிவிக்காமல் ராஜாங்க ரீதியாக இந்த எச்சரிக்கையை டிரம்ப் ஜெலன்ஸ்கிக்கு விடுத்ததாக அந்நாட்டு ஊடகமான பாக்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது

மோதலுக்கு என்ன காரணம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான சந்திப்பு கடந்த வாரம் சவூதி அரேபியாவில் முடிவடைந்தது. ரஷ்யா - அமெரிக்க அதிகாரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

donald trump vladimir putin ukraine russia war

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் உயர்மட்ட சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இந்த போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முதல்படி இது. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது உள்ளது, என்று தெரிவித்து உள்ளனர்.

உக்ரைனுக்கு எதிராக பல விஷயங்கள் இதில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. உக்ரைனை கட்டுப்படுத்துவதற்கான சில விதிகளை அமெரிக்கா உக்ரைனிடம் தனியாக தெரிவித்து உள்ளதாம். அதாவது உக்ரைன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில்.. உக்ரைனிடம் அமெரிக்கா சார்பாக சில கட்டுப்பாடுகள், கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளதாம்.

உக்ரைன் கோபம்

இதுவே உக்ரைனை கோபத்திற்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் உக்ரைனுக்கு கொடுத்த பல கோடி நிதிகளை திருப்பி கொடுங்கள் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

சண்டை

இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முதல்நாள் சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையில் கடுமையான மோதலில் முடிந்தது.

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்சை நோக்கி உக்ரைன் அதிபர் கேள்விகளை வைத்ததே இந்த சண்டைக்கு காரணம் ஆகும். நேற்று வான்ஸ் பேசுகையில், அமெரிக்க ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யா உடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. உங்களின் செயல்பாடு.. உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும்.. உங்களின் நிலைப்பாடு உங்களின் நாட்டை அழித்துவிடும், என்றார்.

இதை கேட்டு கோபப்பட்ட ஜெலன்ஸ்கி, ரஷ்யாவை நீங்கள் தடுக்கவே இல்லையே.. ரஷ்யா 2019ல் இருந்தே போரை மேற்கொண்டு வருகிறது. அவரை நீங்கள் தடுக்கவே இல்லை. நீங்கள் எதை ராஜாங்க செயல்பாடு.. ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்? போர் என்றால் சிக்கல்தான்.. உங்களுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே கடல் இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ரஷ்யாவால் உங்களுக்கும் ஆபத்து வரும், என்றார்.

இதற்கு பதிலடி தந்த அதிபர் டிரம்ப் - உக்ரைன் நல்ல நிலைமையில் இல்லை.. நீங்கள் மிக மோசமான சூழலில் உள்ளீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான். உக்ரைன் மோசமான சூழலுக்கு மாற அனுமதித்து நீங்கள்தான்.. இந்த மோசமான சூழலில் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை, நீங்கள் பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்
என்றார்.

இதற்கு கோபமாக பதில் சொன்ன ஜெலன்ஸ்கி, நீங்கள் இரண்டு நாட்டு போரை பற்றி சத்தமாக இப்படி மீடியா முன் பேசுவது சரியா என்று பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் விளையாடவில்லை.. இந்த போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம்.. நாங்கள் தனித்துவிடப்பட்டு உள்ளோம்.. அதற்கு நன்றி என்றுள்ளார்.

டிரம்ப் - அப்படி எல்லாம் பேசாதீர்கள்.. நீங்கள் தனியாக இல்லை.. நீங்கள் தனியாக இருந்தால் கதையே வேறு. அமெரிக்கா உதவி இருக்கிறது உங்களுக்கு. முன்னாள் பதவியில் இருந்த முட்டாள் பிரதமர் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் தந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். வான்ஸ் சத்தமாக பேசவில்லை. நாங்கள் இருப்பதால் எதோ உங்கள் நாடு இருக்கிறது. இல்லையென்றால் இந்த போரில் நீங்கள் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை.. நீங்கள் 3ம் உலகப்போரை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்.. டீல் செய்ய விருப்பம் இருந்தால் அடுத்த முறை இங்கே வாருங்கள்.. என்று கூறினார்.

வெளியேறினார்

வெள்ளை மாளிகையில் நடந்த இந்த கடுமையான சண்டைக்கு பின்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்டதாக பாக்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. டிரம்ப்பிற்கு மிகவும் நெருக்கமான ஊடகம் ஆகும் இது. அவர்களின் கூற்றுப்படி ஜெலன்ஸ்கியை "வெளியே போங்க" என்று டிரம்ப் கூறியதாக தெரிகிறது.

அதாவது ஜெலன்ஸ்கி வெளியேற விரும்பவில்லை. அவருக்கு மதிய உணவு சம்பிரதாயப்படி தர வேண்டும். ஆனால் ஜெலன்ஸ்கிக்கு அது வழங்கப்படவில்லை. மாறாக நீங்கள் செல்லலாம்.. டீல் செய்ய விருப்பம் இருந்தால் அடுத்த முறை இங்கே வாருங்கள்.. என்று கூறி டிரம்ப் அவரை வெளியேற்றி உள்ளாராம்.

இந்த நிலையில்தான் வெள்ளை மாளிகையில் நடந்த கடுமையான சண்டைக்கு பின்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மக்கள் முன் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாராம். இல்லையென்றால் உக்ரைன் உடன் அமெரிக்காவின் உறவு நீடிக்காது என்று டிரம்ப் எச்சரித்து உள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+