அமெரிக்க அதிபர் தேர்தல்.. முடிவுகள் வராமலே போக கூட வாய்ப்புள்ளது.. குண்டை தூக்கி போடும் டிரம்ப்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் எப்போது முடிவுகள் வரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது, முடிவுகள் வராமலே போக கூட வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அமெரிக்க அதிபர் தேர்தலை கொரோனா காலத்திற்கு இடையே நடத்துவதை அதிபர் டிரம்ப் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இப்படிப்பட்ட நேரத்தில் தேர்தலை நடத்தினால், அது நேர்மையான தேர்தலாக இருக்காது. தேர்தல் முடிவுகள் மாறலாம்.
அதிலும் தபால் வாக்குகள் மூலம் முறைகேடுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. அமெரிக்கா வரலாற்றில் மிக மோசமான தேர்தலாக இது இருக்க போகிறது என்று அதிபர் டிரம்ப் வெளிப்படையாக ஏற்கனவே கூறி இருந்தார்.

ஏன் இப்படி
அதிபர் தேர்தலை தள்ளி வைக்கும் எண்ணத்தில் டிரம்ப் இப்படி பேசுகிறார் என்று கூறப்பட்டது. அதாவது கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்கலாம். இதன் மூலம் மேலும் சில காலத்திற்கு அதிபராக இருக்கலாம் என்று டிரம்ப் திட்டமிடுகிறார். அல்லது தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டு என்று பொய் சொல்லி, தேர்தல் முடிவுகளை ஏற்காமல் பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளது என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறினார்கள்.

என்ன நிலைமை
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் எப்போது முடிவுகள் வரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது, முடிவுகள் வராமலே கூட போக வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. நவம்பர் 3ம் தேதிதான் தேர்தல் முடிவு வரும் என்று நினைக்காதீர்கள்.

வாய்ப்பு இல்லை
தேர்தல் முடிந்த பின்தான் வாக்கு எண்ணிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். நவம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று நினைக்க வேண்டாம். பல வாரங்கள் கழித்து கூட முடிவுகள் வரலாம். பல மாதங்கள் கழித்து கூட முடிவுகள் வரலாம். ஏன் தேர்தல் முடிவுகள் வராமல் கூட போகலாம். எதையும் உறுதியாக சொல்ல முடியாது.

ஏன் இப்படி
50 மில்லியன் மக்கள் தபால் வாக்குகளை அளிக்கப் போகிறார்கள். இதை எண்ணுவது சாதாரண விஷயம் கிடையாது. இதனால் முடிவுகள் தாமதம் ஆகும். நாம் இதற்கு தயாராகவில்லை. நமக்கு இது மிகப்பெரிய அவமானமாக கூட மாற வாய்ப்புள்ளது. இது மிகப்பெரிய பிரச்சனை.

தயார்
மனதளவில் நாம் இதற்கு தயாராக வேண்டும். இதில் பல விதமான இடர்பாடுகள் வரும் என்று டிரம்ப் கூறியுள்ளார். டிரம்ப் இப்படி கூறி இருப்பதன் மூலம் அவர் ஏதோ திட்டமிடுகிறார். தேர்தல் முடிவுகளை தள்ளி வைக்க பிளான் போடுகிறார் என்கிறார்கள். சமயத்தில் அவர் தேர்தல் முடிவுகளை ஏற்காமல் போவதற்கு கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications