அமெரிக்க அதிபர் தேர்தல்.. முடிவுகள் வராமலே போக கூட வாய்ப்புள்ளது.. குண்டை தூக்கி போடும் டிரம்ப்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் எப்போது முடிவுகள் வரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது, முடிவுகள் வராமலே போக கூட வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அமெரிக்க அதிபர் தேர்தலை கொரோனா காலத்திற்கு இடையே நடத்துவதை அதிபர் டிரம்ப் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இப்படிப்பட்ட நேரத்தில் தேர்தலை நடத்தினால், அது நேர்மையான தேர்தலாக இருக்காது. தேர்தல் முடிவுகள் மாறலாம்.
அதிலும் தபால் வாக்குகள் மூலம் முறைகேடுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. அமெரிக்கா வரலாற்றில் மிக மோசமான தேர்தலாக இது இருக்க போகிறது என்று அதிபர் டிரம்ப் வெளிப்படையாக ஏற்கனவே கூறி இருந்தார்.

ஏன் இப்படி
அதிபர் தேர்தலை தள்ளி வைக்கும் எண்ணத்தில் டிரம்ப் இப்படி பேசுகிறார் என்று கூறப்பட்டது. அதாவது கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்கலாம். இதன் மூலம் மேலும் சில காலத்திற்கு அதிபராக இருக்கலாம் என்று டிரம்ப் திட்டமிடுகிறார். அல்லது தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டு என்று பொய் சொல்லி, தேர்தல் முடிவுகளை ஏற்காமல் பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளது என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறினார்கள்.

என்ன நிலைமை
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் எப்போது முடிவுகள் வரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது, முடிவுகள் வராமலே கூட போக வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. நவம்பர் 3ம் தேதிதான் தேர்தல் முடிவு வரும் என்று நினைக்காதீர்கள்.

வாய்ப்பு இல்லை
தேர்தல் முடிந்த பின்தான் வாக்கு எண்ணிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். நவம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று நினைக்க வேண்டாம். பல வாரங்கள் கழித்து கூட முடிவுகள் வரலாம். பல மாதங்கள் கழித்து கூட முடிவுகள் வரலாம். ஏன் தேர்தல் முடிவுகள் வராமல் கூட போகலாம். எதையும் உறுதியாக சொல்ல முடியாது.

ஏன் இப்படி
50 மில்லியன் மக்கள் தபால் வாக்குகளை அளிக்கப் போகிறார்கள். இதை எண்ணுவது சாதாரண விஷயம் கிடையாது. இதனால் முடிவுகள் தாமதம் ஆகும். நாம் இதற்கு தயாராகவில்லை. நமக்கு இது மிகப்பெரிய அவமானமாக கூட மாற வாய்ப்புள்ளது. இது மிகப்பெரிய பிரச்சனை.

தயார்
மனதளவில் நாம் இதற்கு தயாராக வேண்டும். இதில் பல விதமான இடர்பாடுகள் வரும் என்று டிரம்ப் கூறியுள்ளார். டிரம்ப் இப்படி கூறி இருப்பதன் மூலம் அவர் ஏதோ திட்டமிடுகிறார். தேர்தல் முடிவுகளை தள்ளி வைக்க பிளான் போடுகிறார் என்கிறார்கள். சமயத்தில் அவர் தேர்தல் முடிவுகளை ஏற்காமல் போவதற்கு கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications