ரூ.160 லட்சம் கோடி.. உலகப் பொருளாதாரத்தின் 'இதயத் துடிப்பை' நிறுத்திய ஈரான்.. அராம்கோ மீதே அட்டாக்!
நியூயார்க்: திங்கட்கிழமை காலை... மேற்கு உலக நாடுகள் தூக்கத்திலிருந்து எழாத நேரத்தில், சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ராஸ் தனுரா பகுதியில் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. ஈரானின் 'ஷாஹெத்-136' (Shahed-136) ரக டிரோன்கள், அராம்கோ சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கி பாய்ந்தன.
தாக்குதலில் அங்கு சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஒரு செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 10% வரை எகிறியது. இது வெறும் ஒரு ஆலை மீதான தாக்குதல் அல்ல, உலகப் பொருளாதாரத்தின் 'இதயத் துடிப்பை' நிறுத்தும் முயற்சி என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

யார் இந்த அராம்கோ? - ஒரு குட்டி அரசாங்கம்!
சாதாரண ஒரு கம்பெனி என்று நினைத்துவிட வேண்டாம். அராம்கோ (Saudi Aramco) என்பது சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனம். 1930-களில் அமெரிக்கர்களுடன் இணைந்து தொடங்கப்பட்டு, பின்னர் முழுமையாக சவுதி அரசின் வசமானது.
உலகத்தின் பெட்ரோல் பங்க்: உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் 10-ல் ஒரு பகுதியை அராம்கோ தான் பூர்த்தி செய்கிறது.
மக்களின் சொத்து: சவுதி நாட்டின் மொத்த வருமானத்தில் பெரும்பகுதி இந்த ஒரு நிறுவனத்தைச் சார்ந்துதான் இருக்கிறது.
அராம்கோவின் சொத்து மதிப்பு என்ன?
இதன் மதிப்பைச் சொன்னால் தலை சுற்றும். 2026-ன் தற்போதைய நிலவரப்படி:
அராம்கோவின் சந்தை மதிப்பு (Market Cap) சுமார் $1.8 டிரில்லியன் முதல் $2 டிரில்லியன் வரை (சுமார் 160 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்).
ஆப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசாஃப்ட் (Microsoft) போன்ற நிறுவனங்களுக்கு இணையாக, உலகின் டாப் 5 மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
தினமும் சுமார் 1.2 கோடி பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
அராம்கோ எவ்வளவு சக்தி வாய்ந்தது?
"அராம்கோ தும்மினால், உலகிற்கே காய்ச்சல் வரும்" என்பதுதான் உண்மை. இதன் வலிமைக்குச் சில காரணங்கள்:
விலையை நிர்ணயிக்கும் சக்தி: அராம்கோ தனது உற்பத்தியைச் சற்று குறைத்தால் போதும், அமெரிக்கா முதல் இந்தியா வரை பெட்ரோல் விலை தாறுமாறாக உயரும்.
பொருளாதார ஆயுதம்: சவுதி அரேபியா தனது அரசியல் செல்வாக்கை நிலைநாட்ட அராம்கோவை ஒரு பிரம்மாண்ட ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.
தொழில்நுட்ப ராட்சதன்: உலகின் மிகப்பெரிய எண்ணெய் கிணறுகளான 'கவார்' (Ghawar) போன்றவற்றை நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்துவது இவர்கள்தான்.
இனி என்ன நடக்கும்?
ஏற்கனவே ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் ஒரு பெரும் போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா இந்த விவகாரத்தில் எப்படித் தலையிடும் என்பதைப் பொறுத்தே உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் அமையும்.
ராஸ் தனுரா ஆலை தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது, ஒருவேளை நீண்ட நாட்களுக்கு நீடித்தால், உலக பொருளாதாரமே ஒரு நொடி ஆடிபோகும்.. மற்ற அராம்கோ மையங்களை ஈரான் தாக்கினால் மொத்தமாக ஆட்டமே காலியாகும்.. முக்கியமாக இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையில் அதிர்வலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications