நீலகிரி அவலாஞ்சியில் 100 ஆண்டுகள் இல்லாத மழை.. ஒரே நாளில் 82 செமீ மழை பெய்ததால் கடும் பாதிப்பு
Recommended Video

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக கனமழை பெய்து வருவதால் பாதிப்பு கடுமையாக ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 நாள்காக ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் குந்தாவில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது.இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் விழுந்து மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஊட்டி கூடலூரை இணைக்கும் முக்கிய சாலையில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளதாலும், மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி- கூடலூர் இடையே அனுபாபுரம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு பேருந்து மட்டுமே செல்லும் அளவுக்கு சாலை உள்ளது. அதனை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை மொத்தமும் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனிடையே ஊட்டியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். பந்தலூர் அருகே பொன்னானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கூடலூர் அருகே வேடன்வயல் பகுதிகளில் வாழை தோட்டத்தில் வெள்ளம் புகுந்துள்ளது. நீலகிரி மாவட்டடம் முழுவதும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் மக்கள் நீலகிரி மாவட்டத்தில் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் இன்றுடன் கடந்த 4 நாள்களாக பள்ளி கல்லூரிகள் இயங்கவில்லை. இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. நேற்று ஒரே நாளில் 82 செ.மீ மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணைக்கு நீர்வரத்து 38 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications