மக்களுக்கு வழங்கயிருந்த 4,500 விலையில்லா கோழிக்குஞ்சுகள்... அலேக்காக தூக்கிய தேர்தல் அதிகாரிகள்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுர் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்க இருந்த 4,500 விலையில்லா கோழிக்குஞ்சுகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கவே இந்த கோழிக்குஞ்சுகள் கொண்டுவரப்பட்டன.தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் திருப்பி அனுப்பி விட்டோம் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இதை மறுத்துள்ள அப்பகுதியை சேர்ந்த எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே இதை பொதுமக்களுக்கு வழங்க கொண்டு வந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டன. இதில் பொது மக்களுக்கு பணம் பரிசு பொருள்கள் மற்றும் விலையில்லா பொருட்களை வழங்கக் கூடாது என்பதும் அடங்கியுள்ளது. பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னுர் பகுதியில் விலையில்லா கோழிக்குஞ்சுகளை வீடு வீடாக வழங்கி வருவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள் 4,500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்து பண்ணைகளுக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள்
ஆளுங்கட்சியினர் சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கவே இவை கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ''ஒரு குடும்பத்திற்கு 25 கோழிக்குஞ்சுகள் வீதம், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கவே இந்த கோழிக்குஞ்சுகள் கொண்டுவரப்பட்டன.தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் திருப்பி அனுப்பி விட்டோம் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சியினர் வேண்டுகோள்
ஆனால் இதை மறுத்துள்ள அப்பகுதியை சேர்ந்த எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியினர் வேண்டுமென்ற இதை பொதுமக்களுக்கு வழங்க கொண்டு வந்ததாகவும் தற்போது கால்நடைத்துறை அதிகாரிகள் இதனை மாற்றி பேசுவதாகவும் குற்றம்சாட்டினார்கள். விதிகளை மீறி மக்களுக்கு இலவசமாக கோழிக்குஞ்சுகளை வழங்க முயற்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications