மக்களுக்கு வழங்கயிருந்த 4,500 விலையில்லா கோழிக்குஞ்சுகள்... அலேக்காக தூக்கிய தேர்தல் அதிகாரிகள்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுர் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்க இருந்த 4,500 விலையில்லா கோழிக்குஞ்சுகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கவே இந்த கோழிக்குஞ்சுகள் கொண்டுவரப்பட்டன.தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் திருப்பி அனுப்பி விட்டோம் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இதை மறுத்துள்ள அப்பகுதியை சேர்ந்த எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே இதை பொதுமக்களுக்கு வழங்க கொண்டு வந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டன. இதில் பொது மக்களுக்கு பணம் பரிசு பொருள்கள் மற்றும் விலையில்லா பொருட்களை வழங்கக் கூடாது என்பதும் அடங்கியுள்ளது. பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னுர் பகுதியில் விலையில்லா கோழிக்குஞ்சுகளை வீடு வீடாக வழங்கி வருவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள் 4,500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்து பண்ணைகளுக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள்
ஆளுங்கட்சியினர் சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கவே இவை கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ''ஒரு குடும்பத்திற்கு 25 கோழிக்குஞ்சுகள் வீதம், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கவே இந்த கோழிக்குஞ்சுகள் கொண்டுவரப்பட்டன.தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் திருப்பி அனுப்பி விட்டோம் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சியினர் வேண்டுகோள்
ஆனால் இதை மறுத்துள்ள அப்பகுதியை சேர்ந்த எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியினர் வேண்டுமென்ற இதை பொதுமக்களுக்கு வழங்க கொண்டு வந்ததாகவும் தற்போது கால்நடைத்துறை அதிகாரிகள் இதனை மாற்றி பேசுவதாகவும் குற்றம்சாட்டினார்கள். விதிகளை மீறி மக்களுக்கு இலவசமாக கோழிக்குஞ்சுகளை வழங்க முயற்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications